search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகளையும், கைதான சேவியரையும் படத்தில் காணலாம். 

    பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • விருதுநகரில் பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அண்மை காலமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோதிகள் ரேசன் அரிசியை வாங்கி அதனை ஆலைகளில் பாலீஷ் செய்து மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரம் பாலத்தின் கீழ் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது பாலத்தின் கீழ் கிட்டங்கி அமைத்து ரேசன் அரிசி பதுக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த 1,880 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல்

    Next Story
    ×