search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறைகேடு"

    • மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
    • 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.

    மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.

    பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.

    இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்டில் முறைகேடு நடந்துள்ளது.
    • உண்மை தன்மையையை கண்டறிந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளியை அடுத்த எர்மதானாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.

    இவர் முக்கல் நாயக்கம்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    கலெக்டரிடம் ஜெகநாதன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முக்கல் நாயக்கன் பட்டியில் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளேன். தனிப்பட்ட முறையில் ஊராட்சிக்காக தரப்பட்ட டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட்டில் முறைகேடு நடந்துள்ளது.

    என்னை அறியாமல் இதில் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் உண்மை தன்மையையை கண்டறிந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் ரெயில் டிக்கெட் முறைகேடாக விற்ற ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15.44 லட்சம் மதிப்பு உள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் பிடிபட்டன. ரெயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வீட்டில் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அடுத்தபடியாக ரெயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரி யவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் சென்ற 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது.

    அகில இந்திய அளவில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் 140 சட்டவிரோத மென்பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரெயில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்திய அளவில் 143 ரெயில் நிலையங்களில் 17,756 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். ரெயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.7.37 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    194 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பிடித்து வைத்திருந்த 559 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஓடும் ரெயிலில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர் பத்திரமாக காப்பாற்றப்பட்டு உள்ளனர். ரெயிலில் தவறவிடப்பட்ட ரூ.46.5 கோடி மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெண்கள் பாதுகாப்பி ற்காக 640 ரெயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் அடங்கிய "என் தோழி" குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். ஓடும் ரெயில்களில் 209 குழந்தைகள் பிறந்து உள்ளன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
    • கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

    மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதி தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயம்? ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
    • வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் ரோடு அக்கொண்ட பள்ளியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெங்கடேஷ்.

    இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இதற்கு முன்னால் மேலாளராக வேலை பார்த்த ஓசூர் விகாஸ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராஜ் நம்பியார் என்பவர் போலியான இணைய தள முகவரியை உருவாக்கியுள்ளார்.

    அதனை பயன்படுத்தி நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களை திசை திருப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது
    • தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    சென்னை:

    பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யும் முறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. 2020 மார்ச் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யலாம். அதன்பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 என்ற அதிக மாசு ஏற்படுத்தாத புதிய வகை வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனால், பிஎஸ்-4 வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்த நிறுவனங்கள், அந்த வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன. அதன் பிறகு நூதன முறையில் முறைகேடாக குறைந்த விலையில் விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து துறையின் அனுமதி பெறாமல் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக 8 என்ற கூட்டுத்தொகை வரும் எண்ணை யாரும் விரும்பி பதிவு செய்வதில்லை. அந்த கூட்டுத்தொகை வரும் வாகன எண்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் பேக்லாக் என்று தனியாக வைத்துவிடுவார்கள். அந்த எண்களை யாரும் கேட்காததால் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, அந்த எண்களில் பிஎஸ்-4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியர்கள் ஒரு சேர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் பகுதிகளில் அதிக அளவு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்களை பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தணிக்கை செய்யும்போது 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும், அதுபற்றி விசாரித்தபோதுதான், இந்த முறைகேடு தெரியவந்திருக்கிறது.

    இதையடுத்து தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பிஎஸ்-4 வகை வாகனங்கள் 8 கூட்டுத்தொகை வரும் எண்ணில் பதிவு செய்தவர்கள் யார்? விற்பனையாளர், வாங்கியவர், பதிவு தேதி உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முழு விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், வாகன பதிவில் எத்தனை கோடி மோசடி நடந்துள்ளது? என்பது தெரியவரும்.

    தடை செய்யப்பட்ட பிஸ்-4 வாகனங்களை பதிவு செய்த இந்த முறைகேடு, தமிழகம் மட்டுமமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

    • ரெயில்வே தேர்வில் முறைகேடா? என மதுரை அதிகாரி விளக்கம் அளித்தனர்.
    • தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    மதுரை

    மத்திய ரெயில்வே துறையில் தொழில்நுட்ப உதவியாளர், ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய வேலைக்கான போட்டித் தேர்வு கணினி மூலம் நடந்து வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்வுகள் முடிந்து விட்டன.

    தற்போது 4-ம் கட்ட தேர்வு நடந்து வருகிறது. ரெயில்வே தேர்வில் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை ரெயில்வே அதிகாரி கூறுகையில், "ரெயில்வே தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், கேள்வித்தாள்கள் 256 அளவு இலக்க குறியீடுடன் கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளது.

    விண்ணப்பதாரருக்கான தேர்வு மையம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவற்றில் கூட வரிசை தவிர்க்கப்பட்டு உள்ளது. வினாத்தாளிலும் கேள்விகள் மற்றும் 4 விருப்ப விடைகள் வரிசையாக இருக்காது.

    ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசை இல்லாத கேள்விதாள்கள் கணினியில் தோன்றும். தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது ஆதாரமற்றது.

    தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே பணிகளுக்கான தேர்வு, நேர்மையான முறையில் நடந்து வருகிறது.

    குறுக்கு வழியில் ரெயில்வே வேலை வாங்கித் தருவதாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரெயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்து இருப்பதாக தெரிவித்தார்.

    • மதுரை கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சம் முறைகேடு செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாவினிப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. நாங்கள் நடப்பு ஆண்டுக்கான விவசாய பயிர் கடன் பெற்று இருந்தோம். அதனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி ரசீதும் பெற்றுள்ளோம்.

    நாங்கள் புதிய பயிர் கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றோம். அப்போது உங்களது பழைய கடன் வரவு ஆகவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எங்களது சேமிப்பு கணக்கில் நாங்கள் செலுத்திய தொகை மற்றும் கரும்பு பில் தொகை ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது.

    இதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மோசடி- கையாடல் செய்த விவசாயிகளின் ரூ.42 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, பெண் போலீஸ் ஏட்டு வீரம்மாள், போலீஸ்காரர்கள் கோகிலாவாணி, வளர்மதி மற்றும் மனோஸ்ரீ ஆகிய 5 போலீஸ்காரர்களும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, ஏட்டு வீரம்மாள், போலீசார் கோகிலாவாணி, வளர்மதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மனோஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகே காவலர் நல பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் போலீஸ்காரர்களுக்கு அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

    அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்துக் கொண்டு பொருட்கள் வாங்கலாம். இந்த அங்காடியில் போலீஸ்காரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காவலர் அங்காடியில் கணக்கு வழக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது சில பொருட்கள் குறைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய ஆய்வில் ரூ.40 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ) கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, பெண் போலீஸ் ஏட்டு வீரம்மாள், போலீஸ்காரர்கள் கோகிலாவாணி, வளர்மதி மற்றும் மனோஸ்ரீ ஆகிய 5 போலீஸ்காரர்களும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, ஏட்டு வீரம்மாள், போலீசார் கோகிலாவாணி, வளர்மதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மனோஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

    முறைகேட்டில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ட 3 பெண் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
    தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்துணவு திட்ட முட்டை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையாளரான சுதாதேவி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்களும் சிக்கின.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலைகளை தங்கத்தில் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் சுருட்டப்பட்டது அம்பலமானது.

    இதனையடுத்து இந்து அறநிலைய துறையின் கூடுதல் ஆணையராக உயர் பதவியில் இருந்த கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டுள்ளது.


    இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். என்ஜினீயரிங் தேர்வுக்கான மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்படி தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. #AnnaUniversity
    ×