என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஊழல்-முறைகேடு புகார்களில் சிக்கிய பெண் அதிகாரிகள் - அரசு துறை வட்டாரங்களில் பரபரப்பு
By
மாலை மலர்2 Aug 2018 4:36 AM GMT

தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்துணவு திட்ட முட்டை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையாளரான சுதாதேவி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்களும் சிக்கின.
இந்த நிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலைகளை தங்கத்தில் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் சுருட்டப்பட்டது அம்பலமானது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். என்ஜினீயரிங் தேர்வுக்கான மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. #AnnaUniversity
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்துணவு திட்ட முட்டை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையாளரான சுதாதேவி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்களும் சிக்கின.
இந்த நிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலைகளை தங்கத்தில் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் சுருட்டப்பட்டது அம்பலமானது.
இதனையடுத்து இந்து அறநிலைய துறையின் கூடுதல் ஆணையராக உயர் பதவியில் இருந்த கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவும் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். என்ஜினீயரிங் தேர்வுக்கான மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தமிழக அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 3 பெண்கள் முறைகேடு புகார்களில் சிக்கி இருப்பது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. #AnnaUniversity
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
