search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முயற்சி"

    • புதுக்கோட்டை அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • தேசிய ஊரக பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட (100 நாள் வேலை) பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி என்பவர் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டையை வாங்க வந்தார்.

    இதைப்பார்த்த பெண் ஒருவர் ஊராட்சி தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு கலைச்செல்வி பணித்தள பொறுப்பாளராக இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு மனமுடைந்த கலைச்செல்வி மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர், செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார் அளித்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்
    • மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளான்.

    அவினாசி:

    அவினாசி வ.உ.சி., காலனியில்வசித்து வருபவர் உமேஷ் (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று பக்கத்துவீட்டுகாரர் இவருக்கு போன் மூலம் சமையல் அறை கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். எனவே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அவரிடம் உமேஷ் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பீரோ, ரேக், ஆகியவற்றை திறந்து பணம், நகைகளை திருட முயன்றுள்ளதும், நகைகள் ஏதும் இல்லாததால் தப்பி சென்றுள்ளனர்.

    மேலும் வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் தப்பியது.

    இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூர் அருகே பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்று உள்ளது
    • தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிறந்து 41 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி ரதியா (வயது 23) தம்பதி இவர்களது குழந்தை ரித்திகா. பிறந்து 41 நாட்களே ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
    • இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

    மனு

    இங்கு பொதுமக்கள் தங்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளிப்பர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும். இந்த நிலையில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரேஷ்மா (35) என்பவர் இன்று தனது குழந்தைகளு டன் கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார்.

    தீக்குளிக்க முயற்சி

    பின்னர் அவர் திடீரென தான் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேஷ்மாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    கணவர் கொடுமை

    அப்போது அவர் கூறு கையில், எனது கணவர் பெயர் ரமேஷ். நாங்கள் இருவரும் காதலித்து திரு மணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் எனது கணவர் மற்றும் மாமியார் என்னை கொடுமைபடுத்தி வருகின்றனர். இதனால் தற்கொலை செய்யும் முடி வில் இங்கு வந்தேன். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியுடன் கள்ளக்காதலால் அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை ஜெயிலில் அடைத்தனர்.
    • போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் (வயது 26). இவர், நேற்று முன்தினம் எஸ்.புத்தூர் செல்லும் வழியில் சாலையோர பள்ளத்தில் படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். காட்டெருமை தாக்கி காயம் அடைந்ததாக கூறி அவரது தம்பி விவேக், வினோத்தை மீட்டு நாகலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தேகம்

    இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் படுகாயங்களுடன் கிடந்த எஸ்.புத்தூர் பகுதிக்கு சென்று அங்கு காட்டெருமையின் கால் தடங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர். இந்த பகுதியில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் கிடையாது என அவர்கள் தெரிவிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார், வினோத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    கள்ளத் தொடர்பு

    வினோத்துக்கும் அவரது தம்பி விவேக்கின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதாவது, திருமணத்துக்கு முன்பே இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. தம்பியின் திருமணத்துக்கு பிறகும் வினோத் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அறிந்த விவேக், தனது அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்தார்.

    சம்பவத்தன்று கள்ளத் தொடர்பு சம்பந்தமாக எஸ்.புதூர் செல்லும் வழியில் விவேக்குக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் விவேக் அங்கு கிடந்த கல்லை எடுத்து வினோத்தின் தலையில் தாக்கினார். இதில் அவர் சுயநினைவு இழந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரை காட்டெருமை முட்டியதாக விவேக் அனைவரையும் நம்ப வைத்து நாடகமாடியது தெரியவந்தது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.  

    • 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
    • 4 பேரும் இளம்பெண் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், கொண்டையாம் பாளையத்தை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தனது வருங்கால மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் ஜார்ஜ் அவரை சரவணம் பட்டியில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று ஆடை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் அவர் சுவாதியை அவரது வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் கீரநத்தம்- அத்திப்பாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் தென்னை மட்டையால் ஜார்ஜை தாக்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் சுவாதி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 4 பேரையும் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர்.

    இது குறித்து ஜார்ஜ் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி அவரது வருங்கால மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    • டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
    • காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

    அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
    • எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் (வயது 60) மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எனது பெயர் பொன்னம்மாள். எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், எனது கணவர் பெயரில் இருந்த 2 1/2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டார். என் பெயரில் 1 1/2 ஏக்கர் சொத்து இருந்தது. இதை எனது இளைய மகன் லோகநாதன் எடுத்துக்கொண்டார்.

    எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை வற்புறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
    • இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    மகுடஞ்சாவ:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (வயது 42). இவருக்கு மோகனா (25) என்ற மகளும், பிரியா (22) என்ற தங்கையும் உள்ளனர்.

    இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், இடங்கண சாலை நகராட்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 3 பேர், வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகட்ட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியதாக ஆராயி கடந்த 15-ந் தேதி சேலம் கலெக்டர் அலு வலகத்தில் புகாரளித்தார்.

    இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய்து றையினர், ஆராயி வீடு கட்ட வைத்திருந்த பொருட்கள், அவரது கூரை வீடு மற்றும் மரங்களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியா உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் சம்பந்த பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆராயி குடும்பத்தினர் இடங்கணசாலை வி.ஏ.விடம் மனு அளித்து சென்றனர்.

    இது குறித்து ஆராயி கூறியதாவது:-

    நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, தி.மு.க.,பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

    நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பெண் கூச்சலிட்டதால் திருடன் தப்பி ஓட்டம்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் தங்க சங்கலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் மண்டைக்கட்டு ( வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மண்டைக்கட்டுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையப் பகுதியில் பழ வியாபராம் செய்து வந்த மனைவி மகேஸ்வரியிடம், மண்டைக்கட்டுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது மண்டைக்கட்டு கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

    இதை பார்த்து பஸ் நிலையப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மண்டைக்கட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, பஸ் நிலையப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து, பின்னர் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு பஸ் நிலையப் பகுதியில் உலா வந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    ×