என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
- டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
- காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்