search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், 2 மகள்கள் தீக்குளிக்க முயற்சி
    X

    தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் மீட்ட காட்சி.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், 2 மகள்கள் தீக்குளிக்க முயற்சி

    • வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
    • எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் (வயது 60) மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எனது பெயர் பொன்னம்மாள். எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், எனது கணவர் பெயரில் இருந்த 2 1/2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டார். என் பெயரில் 1 1/2 ஏக்கர் சொத்து இருந்தது. இதை எனது இளைய மகன் லோகநாதன் எடுத்துக்கொண்டார்.

    எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை வற்புறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×