search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.  

    அவினாசியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

    • திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்
    • மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளான்.

    அவினாசி:

    அவினாசி வ.உ.சி., காலனியில்வசித்து வருபவர் உமேஷ் (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று பக்கத்துவீட்டுகாரர் இவருக்கு போன் மூலம் சமையல் அறை கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். எனவே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அவரிடம் உமேஷ் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பீரோ, ரேக், ஆகியவற்றை திறந்து பணம், நகைகளை திருட முயன்றுள்ளதும், நகைகள் ஏதும் இல்லாததால் தப்பி சென்றுள்ளனர்.

    மேலும் வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் தப்பியது.

    இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×