search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி
    X

    பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி

    • அரியலூர் அருகே பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்று உள்ளது
    • தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிறந்து 41 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி ரதியா (வயது 23) தம்பதி இவர்களது குழந்தை ரித்திகா. பிறந்து 41 நாட்களே ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×