search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "try"

    • மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், கடினல்வ யல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆயக்கா ரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், தகட்டூர் ராமகோவிந்த ன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி ஆசிரியர் சுப்பிரம ணியன் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.

    ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    தகட்டூர் ராமகோவி ந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிர மணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி னர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பெண் கூச்சலிட்டதால் திருடன் தப்பி ஓட்டம்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் தங்க சங்கலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்சி.
    • நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம், மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்ச்சியில் 20 ஆயிரம் பனை விதைகளை நடும்பணியை துவக்கினர்

    நிகழ்ச்சியில் பனைவிதை நடும்பணியினை நகராட்சி ஆணையர் ஹேமலாதா துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில்நகர் மன்ற தலைவர் புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம்,

    ஓவர்சியர் குமரன் மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் தேத்தாகுடி சாரதா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். வேதாரண்யம் பகுதியின் சுற்றுசூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

    ×