search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
    X

    நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்.

    3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

    • மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், கடினல்வ யல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆயக்கா ரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், தகட்டூர் ராமகோவிந்த ன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி ஆசிரியர் சுப்பிரம ணியன் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.

    ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    தகட்டூர் ராமகோவி ந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிர மணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி னர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×