search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ்"

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
    • இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

    இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா.
    • வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாகவும் சுவாரஸ்ய  அனுபவத்தையும் வழங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

    அந்த வகையில் போட்டிக்கு பிறகு இளம் கிரக்கெட் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா பரிசளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

    • மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சண்டிகர்:

    17-வது ஐ.பி.எல். சீசனின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது.
    • இறுதியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை போராடி வென்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அந்த நேரத்தில் ஷஷாங்க் சிங்- அசுதோஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தது. ஷஷாங்க் சிங் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த அசுதோஷ் சர்மா- ப்ரார் ஜோடி மும்பை அணிக்கு பயத்தை காட்டியது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 15 ஓவரில் 141 ரன்கள் எடுத்திருந்தது.

    அந்த நிலையில் 16-வது ஓவரை மும்பை அணியின் மத்வால் வீசினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 3 சிக்சர் உள்பட 24 ரன்கள் குவித்தது. இதனால் 16-வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 165 ரன்கள் குவித்தது. இதனால் 24 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அப்போது டைம் அவுட் கேட்கப்பட்டது. டைம் அவுட் முடிந்த நிலையில் இருந்து ரோகித் சர்மா பீல்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் ஆலோசனை நடத்துவது என கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    மேலும் சிங்கம் படத்தில் சூர்யா charge எடுப்பது போல ரோகித் சர்மா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது.
    • இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    முல்லான்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 9 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

    முல்லான்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 18 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், சாம் கரண் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் 183 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன்னில் தோற்றது.

    அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), சசாங்சிங் 25 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, கோயட்சி தலா 3 விக்கெட்டும், மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பஞ்சாப் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:-

    நாங்கள் நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம்.

    இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சாம்கரண் கூறியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாண்ட்யா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த ஆட்டமாகும். ஒவ்வொரு வீரருக்கும் பதட்டம் ஏற்பட்டது. அசுதோசின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக போராடி இந்த வெற்றியை பெற்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
    • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

    19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 3 சிக்சர் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த பொல்லார்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

    ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 224 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ரபாடா மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • பஞ்சாப் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
    • மும்பை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

    இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    முல்லாப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டெல்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மைதானமான முல்லாப்பூரில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

    பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியை எட்ட குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் கவனிப்பார்.

    பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அதிரடியாக செயல்பட்டு அசத்துகிறார்கள். ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.

    5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் (105 ரன்) அடித்த போதிலும், மற்ற வீரர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளனர். நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் வாணவேடிக்கை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு மெச்சும் வகையில் இல்லை. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. ஜெரால்டு கோட்ஜீ, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டியது முக்கியமாகும். ரோகித் சர்மாவுக்கு இது 250-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதன் மூலம் டோனிக்கு (256 ஆட்டம்) அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.

    தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன.

    இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்து வீசி 2 ஸ்டெம்புகளை உடைத்தார். அந்த நேரத்தில் அது தொடர்பான வீடியோ, புகைப்படம் வைரலானது. அதற்கு இந்த போட்டியில் மும்பை அணி பழிதீர்க்குமா என மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: அதர்வா டெய்ட் அல்லது பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி களம் இறங்கினார். அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    இந்நிலையில், போட்டியின் போது டோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • மும்பைக்கு எதிராக போட்டியில் டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள்.
    • அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என டு பிளெசிஸ் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் போது எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார்.

    வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×