search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பதிவு"

    • 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
    • முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே தஞ்சாவூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இன்று, நாளை என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06039) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நாளை (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்று அடையும்.

    இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண்.06040) நாளை (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்று 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதியுடன் 2 அடுக்கு ஏசி 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏசி 10 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டி, முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
    • இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் (ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.

    முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.

     

    இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.

    இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்க உள்ளது.

    • இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
    • கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது

    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு களும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வு வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான பாடவாரியான மற்றும் முழு மாதிரி தேர்வுகள் 17- ந்தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு 9-ந் தேதி முதல் 16-ந் ேததி வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1, குரூப் 2 தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் இம்மாதிரி தேர்வுகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயிலின் பயணச் சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கியது.

    சென்னை:

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். தொடா்ந்து இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப் படவுள்ள வந்தே பாரத் ரெயிலின் பயணிகள் சேவை நாளை (திங்கட் கிழமை) முதல் தொடங்க உள்ள நிலையில் பயணச் சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கியது.

    வருகிற 30-ந்தேதி வரை அனைத்து இருக்கை வசதி (ஏ.சி. சோ் காா்), சொகுசு பெட்டிக்கான (எக்ஸி கியூட்டிவ் சோ் காா்) இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதுபோல் வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு அதற்கு இரு நாள்களுக்கு முன்னா் இயக்கப்படும் ரெயிலிலும் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

    திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரெயிலின் இருக்கைகள் இதுவரை குறைந்த அளவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகின்றன.
    • பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னை க்கும், சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும்,

    அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இன்றும் ,நாளையும் இயக்கப்படுகின்றன.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் அவரவா் ஊா்களுக்கு செல்ல வருகிற 24 , 25 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் ஊா் திரும்ப ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொ ண்டம், அரியலூ ரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோ ட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்க ண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களி லிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையால் பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்ப டுகிறது. முன்பதிவு பயணி களின் எண்ணிக்கைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்ப டும். அனைத்துப் போக்குவர த்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு ம் முன்பதிவு சேவை விரிவுபடு த்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    • மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:-

    ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. டிபன், மதிய உணவு உள்ளிட் டவை வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. சில வகை உணவுகளுக்கு மட்டும் விலை குறைக் கப்படாமல் அதற்கோற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. வசூலித்து வருகின்றது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள நாகர்கோவில், திருவனந்த புரம் உள்ளிட்ட 7 ரெயில் நிலையங்களில் 2-ம் வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப் படாத சாதாரண பெட்டியில் பயணம் செய்கின்ற பயணி களுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதற்கான 2-வகை உணவுகள் பின்வருமாறு:-

    முதல் வகை உணவு 7 பூரி, உலர் பருப்பு, கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றிற்கு ரூ.20 நிர்ணயிக்கப் பட்டுள்ளன. மேலும் 2-வது வகை உணவாக அரிசி சாதம், சிவப்பு காராமணி, மசால் பூரி, கிச்சடி, மசால் தோசை ஆகிய தென் இந்திய உணவு வகைகள் ரூ.50-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.

    சாதாரணப்பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் ரெயில் நிலையங்களில் வசதி செய்யப்பட உள்ளது.

    முன்பதிவு செய்யப்ப டாத பெட்டிகள் ரெயில் நிலை யத்தில் வந்து நிற்பதற்கு ஏற்ப நடை மேடைகள் சீர மைக்கப்பட உள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022- ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    வேளாண்மை – உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன் பெறு வதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி என்ற செயலியினை துறை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் உழவன் செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப் பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் தங்கள் செல்சிபோனில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்றுப் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஏப்ரல் 9-ந் தேதி கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம் துவங்கியது.
    • 10 நாட்களில் கோவையில் இருந்து, 6,800 பேர் பயணம் செய்தனர்.

    திருப்பூர் :

    கடந்த ஏப்ரல் 9-ந்தேதி கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம் துவங்கியது. ரெயில் சேவை துவங்கிய 10 நாட்களில் கோவையில் இருந்து, 6,800 பேர் பயணம் செய்தனர். அடுத்தடுத்த நாட்களுக்கும் முன்பதிவு சுறுசுறுப்பானது. மொத்தமுள்ள 535 இருக்கைகளும் நிறைந்தன.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து விட்டதால், வந்தே பாரத் ரெயிலில் முன்பதிவு சற்று குறைந்துள்ளது. மொத்தமுள்ள 533 இருக்கைகளில் கோவையில் இருந்து துவங்கும் பயணத்துக்கு 450க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பியுள்ளன. 50 முதல் 75 இருக்கைகள் காலியாகக் கிடக்கின்றன. கோவையில் இருந்து சென்னைக்கு முன்பதிவு குறைந்தாலும் சேலம் - சென்னை இடையே டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

    • அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
    • நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

    முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரடிக்கல்லில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது.
    • வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் திருக் கல்யாண நிகழ்ச்சியை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரே உள்ள பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கான காளைகள் முன்பதிவு மற்றும் மாடுபிடி வீரர்க ளுக்கான முன்பதிவு நேற்று மதியம் ஆன்லைனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறை 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்த போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மாடுபிடி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அனைவரும் பார்வையாளர்களாகவே இருப்பார் கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    போட்டிகளை அமைச்சர் மூர்த்தி, தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இது குறித்து ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தும் விழா கமிட்டியினர் கூறுகையில், போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடு பிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும்.

    வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்ககாசு, குத்துவிளக்கு, பேன், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப் படும். காயமடைந்த வர்க ளுக்கு உாிய சிகிச்சை யளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கால்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப் புடன் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெற உள்ளது. போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரவு வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    • பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.
    • அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    அலகுமலையில் ஜல்லிக்க ட்டு போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாகவும், நாளை மறுநாள் முதல் முன்புதிவு தொடங்குவ தாகவும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதனால் ஆலோசனை க்கு பின்னர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி அலகுமலையில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் தொடங்குகிறது. எனவே மாடுபிடி வீரர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×