search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICF"

    • 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
    • தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.

    சென்னை:

    அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.

    தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், இந்திய ரெயில்வே துறைக்கான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியன் ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 1957-58-ம் காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 74 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரெயில், டெமு ரெயில், அதிவேக விபத்து மீட்பு ரெயில், சொகுசு ரெயிலான மகாராஜா விரைவு ரெயில் என பல்வேறு வடிவமைப்பிலான ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில், ஐ.சி.எப். இந்திய ரெயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து சாதனைப்படைத்து உள்ளது. நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், 875 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளும் அடங்கும். ஐ.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரெயில் பெட்டியை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், நேற்று பார்வையிட்டு, ரெயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை, ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரெயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரெயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும். மேலும், ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015-ம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.
    • 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை ரெயில் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

    1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உள்பட பல்வேறு ரெயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான ரெயில் பெட்டிகள் தயா ரிப்பு பணியில் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை முக்கிய பங்காற்ற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிவே கத்தில் செல்லும் 2 ரெயில்கள் அங்கு தயாரிக்கப்பட உள்ளன.

    மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களை தயாரிப்பது தொடர்பாக கடந்த 4-ந் தேதி மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து புதிய அதிவேக ரெயில்கள் இரண்டையும் தயாரிப்பதற் கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் வேகம் 180 கி.மீ. ஆகும் புதிதாக தயாரிக்கப்பட உள்ள 250 கி.மீ.வேகம் கொண்ட 2 அதிவேக ரெயில்களும் தயாரிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதுவே அதிவேக ரெயிலாக இருக்கும்.

    இந்த 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் இவ்வளவு அதிவேகத்தில் செல்லும் 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் பணிகள் முடிந்து ரெயில் இயக்கப்பட்டால் அது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன.
    • ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும்.

    சென்னை:

    பயணிகள் ரெயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை சென்னையில் உள்ள ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியுள்ளது. இங்கு இந்தியாவிலேயே முதல் முறையாக 'புஷ்-புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும். 2 என்ஜின்கள் இருப்பதால் இந்த ரெயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். இந்த ரெயில் குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளை கொண்டிருக்கும்.

    இதில் 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் குலுங்காமல் செல்லும் என்பதால் பயணிகளுக்கு வசதியாக அமையும்.

    இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்த ரெயிலுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த ரெயில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்டிருக்கிறது. பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக நீண்ட தூர வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வந்தே பாரத் போன்ற ரெயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதை இந்த புதிய ரெயில் நோக்கமாக கொண்டு உள்ளது. இந்த ரெயில் பெட்டிகளை தொழில்நுட்ப அமைப்பினர் விரைவில் ஆய்வு செய்வார்கள். அடுத்த சில மாதங்களில் இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள இடங்களுக்கு இந்த ரெயில் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
    • புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை 'ஐ.சி.எப்.' நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக விரைவு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    இந்நிலையில் பயணிகள் வசதிக்காக புதிதாக தூங்கும் வசதியுடன் கூடிய 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக பெங்களூருவில் உள்ள 'பி.இ.எம்.எல்.' தொழிற்சாலையில் இதற்கான மாடல் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரத்தில் இந்த மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகிறது. மாதிரி வடிவம் அந்த ரெயில் ஒப்புதலானவுடன், 'வந்தே பாரத் சிலீப்பர்' புதிய ரெயில்கள் தயாரிக்கப்படும்.

    'வந்தே பாரத்' படுக்கை வசதியுடன் கூடிய புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 'பெல்' திட்டாக் தொழிற்சாலையில் இந்த ரெயில் பெட்டிக்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது. ஐ.சி.எப். கூட்டு முயற்சியுடன் 80 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.எப். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இந்த புதிய ரெயிலில் ஏ.சி. 2-வது வகுப்பு, ஏ.சி. 3-வது வகுப்பு, பெட்டிகள் அமைக்கப்படுகிறது. 10 புதிய ரெயில்கள் ரூ.675 கோடியில் தயாரிக்கப்படுகிறது.

    ஏ.சி.3-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் அழகிய உயர்தர வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அகலமான ஜன்னல், மின்விளக்கு வசதியுடன் சிறப்பாக உலகதரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

    மேல் படுக்கைக்கு பயணிகள் எளிதில் செல்ல 6 படி ஏணிகள் அமைக்கப்படும். இது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் வீதம் உருவாக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 25-வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டியை ஐ.சி.எப். உருவாக்கி உள்ளது.
    • இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    சென்னை:

    இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் வடிவாக்கம் செய்யப்பட்டு சென்னை ஐசிஎப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இந்திய ரெயில்வேயினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளிலெல்லாம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து வந்தே பாரத் ரெயில்களும் சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையிலேயே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐசிஎப்பில் 25வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டி உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.எப். நிறுவன பொது மேலாளர் பி.ஜி.மால்யா கூறுகையில், இந்த அதிநவீன ரெயில் பெட்டி அனைத்து இந்தியர்களின் இதயத்தையும் கவர்ந்துள்ளது. உங்களின் தளராத முயற்சியினால் இன்று நமது நிறுவனம், 25வது வந்தே பாரத் ரெயில் பெட்டியை உருவாக்கி உள்ளது. இதை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரெயில் போபாலுக்குச் செல்கிறது என தெரிவித்தார்.

    இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    • பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2023 ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி - வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம் தமிழில் நலம் விசாரித்த அவர், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலில் ஏறி பார்வையிட்டார்.

    அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரெயில்களை நாடு முழுதும் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

    மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். மற்றும் சுங்க இலாகா அணிகள் வெற்றி பெற்றனர்.
    சென்னை:

    சுந்தர் நினைவு கைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கு.க. செல்வம் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்தார். போட்டி அமைப்பாளர் பென்னி கூக் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 25-23, 25-15, 23-25, 30-28 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சுங்க இலாகா 16-25, 21-25, 25-16, 25-15, 17-15 என்ற கணக்கில் செயிண்ட் ஜோசப்ஸ் அணியை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் ஜி.கே.எம். பவுண்டேசன் 25-21, 25-12 என்ற கணக்கில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரியை வீழ்த்தியது. #tamilnews
    ×