search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தயார் நிலையில் 25வது வந்தே பாரத் ரெயில் - இது ஒரு மைல் கல் என ஐ.சி.எப் பெருமிதம்
    X

    தயார் நிலையில் 25வது வந்தே பாரத் ரெயில் - இது ஒரு மைல் கல் என ஐ.சி.எப் பெருமிதம்

    • 25-வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டியை ஐ.சி.எப். உருவாக்கி உள்ளது.
    • இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    சென்னை:

    இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் வடிவாக்கம் செய்யப்பட்டு சென்னை ஐசிஎப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இந்திய ரெயில்வேயினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளிலெல்லாம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து வந்தே பாரத் ரெயில்களும் சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையிலேயே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐசிஎப்பில் 25வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டி உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.எப். நிறுவன பொது மேலாளர் பி.ஜி.மால்யா கூறுகையில், இந்த அதிநவீன ரெயில் பெட்டி அனைத்து இந்தியர்களின் இதயத்தையும் கவர்ந்துள்ளது. உங்களின் தளராத முயற்சியினால் இன்று நமது நிறுவனம், 25வது வந்தே பாரத் ரெயில் பெட்டியை உருவாக்கி உள்ளது. இதை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரெயில் போபாலுக்குச் செல்கிறது என தெரிவித்தார்.

    இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    Next Story
    ×