search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அலகுமலையில் 23-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி - நாளை மறுநாள் முன்பதிவு தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் அலகுமலையில் 23-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி - நாளை மறுநாள் முன்பதிவு தொடங்குகிறது

    • பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.
    • அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    அலகுமலையில் ஜல்லிக்க ட்டு போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாகவும், நாளை மறுநாள் முதல் முன்புதிவு தொடங்குவ தாகவும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதனால் ஆலோசனை க்கு பின்னர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி அலகுமலையில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் தொடங்குகிறது. எனவே மாடுபிடி வீரர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×