என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முதலமைச்சர் பதவி
நீங்கள் தேடியது "முதலமைச்சர் பதவி"
சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
முதல்-அமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை:
மதுரை தெற்கு தொகுதியில் காவிரி வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாபா.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாபா.பாண்டியராஜன் பேசியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டு காலம் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கு சட்ட போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக்காட்டிய ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோமோ அதே போல காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காவிரி நாயகன் என்று அழைக்க வேண்டும்.
இன்றைக்கு ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
தமிழகத்தில் அம்மா வழியில் நடந்து வரும் எடப்பாடி அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆட்சி மீது குறைகளை கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எலி போல இருந்துவிட்டு வெளியே புலி போல் பேசுகிறார்.
தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் விரோத திட்டங்களான ஸ்டெர்லைட், கெயில் குழாய் திட்டம், நீட் தேர்வு ஆகியவை கொண்டுவரப்பட்டன.
ஆனால் மக்களை ஏமாற்ற தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும், பாதிப்பும் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிபட்டு வர மாட்டார்.
இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் பணியாற்றும். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. எனவே பொதுமக்களாகிய நீங்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதூர் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, அன்புச்செழியன், செந்தில்குமார், சோலை ராஜா, ஜெயரீகன், நல்லுசாமி, விக்ரம் நல்லுசாமி, பாஸ்கரன், வட்டச் செயலாளர்கள் கேபிள் பார்த்தசாரதி, தேவதாஸ், ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் நூர் முகமது, பார்த்திபன், ராஜீவ்காந்தி, தாஸ், கலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
மதுரை தெற்கு தொகுதியில் காவிரி வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாபா.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாபா.பாண்டியராஜன் பேசியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டு காலம் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கு சட்ட போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக்காட்டிய ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோமோ அதே போல காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காவிரி நாயகன் என்று அழைக்க வேண்டும்.
இன்றைக்கு ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
தமிழகத்தில் அம்மா வழியில் நடந்து வரும் எடப்பாடி அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆட்சி மீது குறைகளை கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எலி போல இருந்துவிட்டு வெளியே புலி போல் பேசுகிறார்.
தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் விரோத திட்டங்களான ஸ்டெர்லைட், கெயில் குழாய் திட்டம், நீட் தேர்வு ஆகியவை கொண்டுவரப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும், பாதிப்பும் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிபட்டு வர மாட்டார்.
இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் பணியாற்றும். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. எனவே பொதுமக்களாகிய நீங்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதூர் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, அன்புச்செழியன், செந்தில்குமார், சோலை ராஜா, ஜெயரீகன், நல்லுசாமி, விக்ரம் நல்லுசாமி, பாஸ்கரன், வட்டச் செயலாளர்கள் கேபிள் பார்த்தசாரதி, தேவதாஸ், ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் நூர் முகமது, பார்த்திபன், ராஜீவ்காந்தி, தாஸ், கலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கண்மாய் கரை, சொக்கலிங்புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தார்சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் யாரையும் அரசியல் ரீதியாக ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.
ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து இப்போது பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக தான் அறிவித்த நன்கொடை பணத்தை ரஜினிகாந்த் இன்னும் கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கும்போது மக்கள் எப்படி அவரது வாக்குறுதியை நம்புவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கண்மாய் கரை, சொக்கலிங்புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தார்சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் யாரையும் அரசியல் ரீதியாக ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.
ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து இப்போது பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக தான் அறிவித்த நன்கொடை பணத்தை ரஜினிகாந்த் இன்னும் கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கும்போது மக்கள் எப்படி அவரது வாக்குறுதியை நம்புவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X