என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்10 May 2018 6:42 AM GMT (Updated: 10 May 2018 6:42 AM GMT)
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கண்மாய் கரை, சொக்கலிங்புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தார்சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் யாரையும் அரசியல் ரீதியாக ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.
ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து இப்போது பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக தான் அறிவித்த நன்கொடை பணத்தை ரஜினிகாந்த் இன்னும் கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கும்போது மக்கள் எப்படி அவரது வாக்குறுதியை நம்புவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கண்மாய் கரை, சொக்கலிங்புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தார்சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் யாரையும் அரசியல் ரீதியாக ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.
ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து இப்போது பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக தான் அறிவித்த நன்கொடை பணத்தை ரஜினிகாந்த் இன்னும் கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கும்போது மக்கள் எப்படி அவரது வாக்குறுதியை நம்புவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X