search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்த்தாண்டம்"

    • உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கடந்த 29-ம் தேதி சுவர் ஏறி குதித்து புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு உண்டி யலை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மறுநாள் (30-ந்தேதி) மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடு க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணம் ெகாள்ளை போயிருந்தது.

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் டிப்- டாப் தோற்றத்துடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கோயி லுக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த கோயில் மேல் சாந்தி, ஆலய காம்பவுண்டுக்குள் வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து இருந்த கொள்ளையர்கள் ஆல யத்தின் உள்ளே சட்டையை கழற்றி விட்டு வந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வது போன்று நோட்மிட்டுள்ளனர்.

    இதை பார்த்த ஆலய மேல் சாந்தி பிரசாதம் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் பிரசாதம் வாங்காமல் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனி படை போலீசார் கோவில் கொள்ளையர்களின் போட்டோக்களை கொண்டு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மேல் சாந்தியிடம், அடையாளம் காட்டும் படி கூறியுள்ளனர்,

    அதில் பார்த்தபோது வட இந்தியாவில் உள்ள பிரபல கொள்ளையனின் ஒருவன் அடையாளம் காட்டப்பட்டது, மேலும் மற்றொரு கொள்ளையன் நாகர்கோயிலை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது,

    கோயிலை கொள்ளை யடிக்க வடநாட்டு கொள்ளை யர்கள் நோட்ட மிட்டு உண்டியலை கொள்ளை யடித்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
    • இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
    • 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.

    இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.

    போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்று வருகிறது, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் காம்பவுண்ட் சுவருக்குள் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த 2½ அடி ஸ்டீல் உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். இதை யடுத்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ்செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் எங்கு தூக்கி செல்லப்பட்டது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர் மேலும் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆனால் எந்த துப்பும் துலங்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. உண்டியலை கைப்பற்றிய போலீசார், உண்டியலை பார்த்தபோது உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். அந்த கோவில் உண்டியல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேவசம்போர்டு அதிகாரி களால் திறக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஒரு வருடமான நிலையில் திறக்க உள்ள நிலையில், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்
    • குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறை களை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறை கள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லப்பட்ட 2 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படு கிறது.

    இதன் உரிமையாளர் யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட விரிகோடு, பாண்டியன் விளையை சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீமா.

    இவர் திக்குறிச்சியில் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக வேலை ஆட்களை வைத்து அதில் நின்ற மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தார். அப்போது மார்த்தாண்டம் போலீசார் மற்றும் பலர் சேர்ந்து அங்கு சென்று இந்த பகுதியில் வேலை செய்ய கூறியது யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டு சீமாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் பறித்து சென்றதாக தெரிகிறது.

    இதற்கு அந்த பெண் தரப்பில் ஏன் எதற்காக வேலையை தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு உன்னிடம் கூற தேவையில்லை என கூறி கூட்டாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்ததை தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த சீமா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து, போலீசாரும் அந்த கும்பலும் அங்கிருந்து சென்று விட்டனர். இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சீமாவை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சீமா மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சர் ஆ கியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திக்குறிச்சி சேம்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி வெலிகல் அருகே முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரி சோதித்துப் பார்த்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
    • மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா விஜயகுமார் (வயது 45). இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்ற நிலையில் ராஜா விஜயகுமார் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அனிக்குமார் (27), ஆஷிக் (21), ஆஷிப் (19), விஜிகுமார் (36), ஷகிலா (47) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உருட்டு கட்டையால் ராஜா விஜயகுமாரை அடித்தனர்.

    இதில் அவருக்கு இடது கண், அடி வயிறு மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் அலறியுள்ளார்.

    இதைடுத்து அப் பகுதியைச் சேர்ந்வர்கள் விரைந்து வந்தனர். அவர் களை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிழற்குடையை சரி செய்ய வேண்டும்
    • சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் பகுதியில் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டு மணி வரை 2¾ கிலோமீட்டர் நீளம் மிகப் பிரம்மாண்டமான இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேற்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனை அடுத்து பள்ளி, கல்லூரி நேரங்கள் மற்றும் காலை மாலை நேரங்களில் நெரிசல் வெகுவாக குறைந்தது.

    இதற்காக பாலத்தின் மேற்பகுதியில் பயணி கள் அமர்ந்து செல்ல நாகர்கோவில் - திருவனந்த புரம் வழியாக செல்லும் பயணிகளுக்காக இடது பக்கம் இரும்பிலான நிழல் குடை அமைக்கப்பட்டி ருந்தது, அதன் மேற்பகுதியில் பிளாஸ்டிக் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திடீரென அந்த நிழற் குடை சரிந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. இன்று காலையில் பார்க்கும் பொழுது அந்த நிழல் கூடை வெளிப்பக்கமாக சரிந்துள்ளது.

    இந்த நிழற் குடை பெயர்ந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் நிழல் குடை எவ்வாறு சரிந்தது என தெரியவில்லை, காற்றின் வேகத்தால் சரிந்ததா அல்லது, ஏதேனும் விஷமிகள் பெயர்துள்ள னரா என தெரியவில்லை.

    சம்பந்தப்பட்ட அதி காரிகள் விரைந்து சென்று நிழற்குடையை சரி செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இந்த சாலையில் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேரளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை நெடுஞ்சா லையில் ஏராளமான வாக னங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு புதியதாக தார் போடப்பட்டது.

    இதில் திருவட்டார் அரசு உயர்நி லைப்பள்ளி எதிரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து ஆய்வு செய்து அவசரகதியில் தற்காலிக மாக அந்த பகுதியை தார் போட்டு சரி செய்தனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிர் புறமிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டை யொட்டியுள்ள பகுதியில் இருந்து தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    "காங்கரை தேரி" எனப்ப டும் இந்த பகுதி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அதிலும் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சிலவேளைகளில் நகர முடி யாமல் திணறும். அவ்வாறு திணறும் லாரி உள்ளிட்ட கனரக வாகனத்தில் இருந்து சிறிய வாகனங்களில் பொருட்கள் மாற்றப்பட்ட

    பின்னரே கனரக வாக னங்கள் நகர்ந்து செல்லும். இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் வரும்போது ரோட்டில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான லோடு கனிம வளங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்றுவருவதால் ரோடு பாதிப்புக்குள்ளாகிறது

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் தரப்பில் இருந்து வெடித்திருந்த சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டு ரோடு ரோலர் இயந்திரத்தை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது தார்க்கலவை போடப்பட்ட இடத்திலிருந்து, சாலையில் தார்க்கலவை செட் ஆகாமல் மீண்டும் வெடிப்பு ஏற்படத்துவங்கி விரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குளாகின்றனர்.

    எனவே நெடுஞ்சா லைதுறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மே ற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வழியாக தான் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேர ளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    இப்பகுதி ரோட்டின் இருபுறமும் நடைபாதை ரோட்டில் இருந்து 1 முதல் 2 அடி பள்ளத்தில் உள்ளதால் பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டை சரி செய்வதோடு ரோட்டின் இருபுறமும் வர்ண கற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கோயம்புத்தூர் பி.ஆர். எஸ் வடக்கு தெருவை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ (வயது 24). இவர் திருவட்டார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மார்த தாண்டம் வடக்கு தெருவில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பு விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வருகிறார். அவரது அறையில் ஏற்கனவே அவருடன் தங்கி இருந்த பெண்மணி அந்த அறையை விட்டு சென்று விட்டதால், கடந்த 5 தினங்களுக்கு முன்பு வேறொரு பெண் அவரது அறையில் தங்கியுள்ளார்.

    நேற்று மாலை அவர் திடீரென வித்யாஸ்ரீயை தாக்கி கடித்து காயப்படுத்தி யதாக கூறப்படுகிறது. இதனால் வித்யா ஸ்ரீ கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதில் இருவரும் கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இருவரையும் குழித்துறை அரசு மருத்துவம னையில் சிகிச் சைக்காக சேர்த்துள்ள னர்.

    இது குறித்து வித்யா ஸ்ரீ கூறும்போது :- அந்த பெண் வேலை எதுவும் இன்றி சும்மா அறையில் இருப்பதாகவும், அவர் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். வித்யா ஸ்ரீ கொடுத்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்கெட்டின் பின்புறம் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டல்
    • பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, ‘ஜிபே’ மூலமும் பணம் பறிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மஞ்சாலு மூடு நாரகத்தின் குழி பகுதி யைச் சேர்ந்த ஜிஸ்னு (வயது 26), சுர்ஜித் (22) ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்கள் புத்தாண்டை முன்னிட்டு மார்த்தாண்டம் படர்ந்த பாறை பகுதியில் உள்ள தங்களது நண்பர் சோனு ஜோஸ்பின் வீட்டிற்கு வந்தனர். கடந்த 4-ம் தேதி ஜிஸ்னு, சுர்ஜித் இருவரும் இரவு 11.30 -மணி அளவில் மார்த்தாண்டம் சென்று விட்டு மார்க்கெட்டின் பின்புறம் உள்ள வழி வழியாக நடந்து சென்ற னர்.

    அப்போது 5 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளது. மேலும் அந்தக் கும்பல் 2 பேரையும் தாக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு வைத்து பணத்தை பறித்துக் கொண்டதோடு, அவர்களது பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, 'ஜிபே' மூலமும் பணம் பறித்து உள்ளனர்.

    பின்னர் 2 வாலிபர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெனால்ட் (27) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தலை மறைவாக இருந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஆளுவிளை குமாரதாஸ் என்பவரின் மகன் அஜின் மோன்ஸே (23), மார்த்தாண்டம் கொடுங் குளத்தை சேர்ந்த பீட்டர் ரகு ராஜ் என்பவரது மகன் சிபின் இம்மானுவேல் (22), பாகோடு ஒற்றை விளைைய சேர்ந்த தேவசகாயம் மகன் அஸ்வின் (19 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    ×