search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே மகாவிஷ்ணு ஆலயத்தில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
    X

    கோவில் உண்டியல்.

    மார்த்தாண்டம் அருகே மகாவிஷ்ணு ஆலயத்தில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்று வருகிறது, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் காம்பவுண்ட் சுவருக்குள் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த 2½ அடி ஸ்டீல் உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். இதை யடுத்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ்செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் எங்கு தூக்கி செல்லப்பட்டது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர் மேலும் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆனால் எந்த துப்பும் துலங்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. உண்டியலை கைப்பற்றிய போலீசார், உண்டியலை பார்த்தபோது உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். அந்த கோவில் உண்டியல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேவசம்போர்டு அதிகாரி களால் திறக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஒரு வருடமான நிலையில் திறக்க உள்ள நிலையில், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×