search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக பாரம்"

    • ரூ.25 லட்சம் அபராதம் வசூல்
    • அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் அதிகபாரத்துடன் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

    எனவே அதிகபாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைய தடை இருந்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக இறச்சகுளம் களியங்காடு வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கனிம வள கடத்தலை கட்டுப்படுத்த இரவு, அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வரு கிறார்கள். அனுமதிஇன்றி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.25 லட்சம் அபராத தொகையாக வசூல் ஆகியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் அந்தந்த போலீஸ் நிலை யங்களின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பிறகு மட்டுமே அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

    கோட்டார் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 9 டாரஸ் லாரிகள் பிடிபட்டது. அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிப்பட்ட லாரிகள் போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது காலை நேரங்களில் அதிக அளவு வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நாகர்கோவில் நகர பகுதிகளிலும் காலை நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    எனவே போலீசார் காலை நேரங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் தினமும் போலீசாரும் ,அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் தக்கலை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். களியக்காவிளை பகுதியில் 4 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டது.

    நேற்று ஒரே நாளில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    இன்று காலையிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோ வில் நகர் பகுதியில் நடத்தப் பட்ட சோதனையின் போது அந்த வழியாக வந்த லாரி களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கோட்டார் பகுதியில் நடந்த சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 டாரஸ் லாரிகள் சிக்கியது. பிடிபட்ட லாரிகளை கோட்டார் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிடிபட்ட லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    விளவங்கோடு தாலுகா தனி வட்டாட்சியர் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அதிகாரம் ஏற்றி சென்ற கனக லாரியை மடக்கி சோதனை செய்தனர், லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். மேலும் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், அதேபோல அதிக பாரம் ஏற்றிச் சென்ற மற்றொரு கனக கனரக லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை பெற்று வருகிறது.

    • போலீசாரின் சோதனைக்கு பயந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளும் சிக்கின
    • களியக்காவிளை அருகே இன்று அதிகாலை சோதனை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் 100-க் கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு-பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, தொடர் விபத்துக்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உத்தர விட்டனர். அதன்படி கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கனிம வளங்கள் கடத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 4 வாகனங்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர்கள் யார்? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் குழித்துறை முதல் களியக்காவிளை வரை சாலையோரம் கனிமவளம் ஏற்றிய லாரிகள் நிற்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டி ருப்பது தெரியவந்தது.

    ஆனால் லாரியில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. இதனால் லாரி களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீசாரின் சோதனை காரணமாக, கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே விட்டு விட்டு டிரைவர்கள் தப்பிச் செல்வது ஏற்கனவே நடந்து வருகிறது. அதுபோலத் தான் தற்போதும் இந்த வாகனங்களை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த லாரிகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அதனை வைத்து உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது
    • பறிமுதல் செய்த 6 லாரிகளையும் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லப்படுவதையொட்டி வந்த புகாரின் அடிப்ப டையில் வருவாய் துறை, கனிம வளத்துறை, போலீஸ், போக்குவரத்து துறை உள்பட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் விளவங்கோடு தனி தாசில்தார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதிக பாரம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர்ந்து சோதனை செய்ததில் இதுபோல் மேலும் 5 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த 6 லாரிகளையும் கோழிப்போர் விளையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த லாரி களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
    • உரிமையாளர்கள்-டிரைவர்கள் மீது வழக்கு

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் சரகம் சென்னிதோட்டம் பாலம் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய 2 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதுபற்றி லாரி டிரைவர்கள் கீழ் மாங்கோடு சிவபிரசாத், விளவங்கோடு பிரபு ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதிக லாபத்திற்காக கூடுதல் பாரம் ஏற்றி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளின் உரிமையாளர்கள் சுபா, மனோஜ், டிரைவர்கள் சிவபிரசாத், பிரபு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்து
    • வாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்க ளில் இருந்தும் 100-க்கணக் கான லாரிகள் கனிம வளங்களை அதிக அளவில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார், பி.பி .எம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தவழியாக வந்த 8 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது வாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. அதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று மார்த்தாண்டம் வழியாக 3 பெரிய லாரி களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அனுமதி கடிதம் மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை பிடித்தனர்
    • எம். சாண்ட் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேசமணி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமை யிலான போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த லாரிகளை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அபரா தம் விதித்தனர். இதே போல் மாவட்டம் முழுவ தும் நேற்று இரவு போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமை யில் போலீசார் இன்று அதிகாலை புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து எம். சாண்ட் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    லாரியின் மீது சந்தேகம் அடைந்து எடை மேடை யில் கொண்டு ஆய்வு செய்த போது அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.பின்னர் அந்த 5 லாரிகளை பறிமுதல் செய்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்
    • குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறை களை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறை கள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லப்பட்ட 2 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படு கிறது.

    இதன் உரிமையாளர் யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது.

    கடலூர்:

    கடலூரில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்ய கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் கடலூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    ஷேர் ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாக்கு சக்கர வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
    • களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக் கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட ஒரு கனரக லாரியை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்
    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட நான்கு கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×