தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றிய 6 லாரிகளுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்

7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறதுபறிமுதல் செய்த 6 லாரிகளையும் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
தக்கலை அருகே  அதிக பாரம் ஏற்றிய 6 லாரிகளுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லப்படுவதையொட்டி வந்த புகாரின் அடிப்ப டையில் வருவாய் துறை, கனிம வளத்துறை, போலீஸ், போக்குவரத்து துறை உள்பட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விளவங்கோடு தனி தாசில்தார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதிக பாரம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர்ந்து சோதனை செய்ததில் இதுபோல் மேலும் 5 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த 6 லாரிகளையும் கோழிப்போர் விளையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த லாரி களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com