search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
    X

    மார்த்தாண்டம் அருகே அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

    • அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
    • உரிமையாளர்கள்-டிரைவர்கள் மீது வழக்கு

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் சரகம் சென்னிதோட்டம் பாலம் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய 2 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதுபற்றி லாரி டிரைவர்கள் கீழ் மாங்கோடு சிவபிரசாத், விளவங்கோடு பிரபு ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதிக லாபத்திற்காக கூடுதல் பாரம் ஏற்றி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளின் உரிமையாளர்கள் சுபா, மனோஜ், டிரைவர்கள் சிவபிரசாத், பிரபு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×