அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல்

போலீசாரின் சோதனைக்கு பயந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளும் சிக்கினகளியக்காவிளை அருகே இன்று அதிகாலை சோதனை
அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல்
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் 100-க் கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த லாரிகள் இரவு-பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, தொடர் விபத்துக்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உத்தர விட்டனர். அதன்படி கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கனிம வளங்கள் கடத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 4 வாகனங்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர்கள் யார்? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் குழித்துறை முதல் களியக்காவிளை வரை சாலையோரம் கனிமவளம் ஏற்றிய லாரிகள் நிற்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டி ருப்பது தெரியவந்தது.

ஆனால் லாரியில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. இதனால் லாரி களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீசாரின் சோதனை காரணமாக, கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே விட்டு விட்டு டிரைவர்கள் தப்பிச் செல்வது ஏற்கனவே நடந்து வருகிறது. அதுபோலத் தான் தற்போதும் இந்த வாகனங்களை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த லாரிகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அதனை வைத்து உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com