search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாவிஷ்ணு ஆலயம்"

    • உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கடந்த 29-ம் தேதி சுவர் ஏறி குதித்து புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு உண்டி யலை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மறுநாள் (30-ந்தேதி) மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடு க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணம் ெகாள்ளை போயிருந்தது.

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் டிப்- டாப் தோற்றத்துடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கோயி லுக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த கோயில் மேல் சாந்தி, ஆலய காம்பவுண்டுக்குள் வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து இருந்த கொள்ளையர்கள் ஆல யத்தின் உள்ளே சட்டையை கழற்றி விட்டு வந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வது போன்று நோட்மிட்டுள்ளனர்.

    இதை பார்த்த ஆலய மேல் சாந்தி பிரசாதம் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் பிரசாதம் வாங்காமல் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனி படை போலீசார் கோவில் கொள்ளையர்களின் போட்டோக்களை கொண்டு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மேல் சாந்தியிடம், அடையாளம் காட்டும் படி கூறியுள்ளனர்,

    அதில் பார்த்தபோது வட இந்தியாவில் உள்ள பிரபல கொள்ளையனின் ஒருவன் அடையாளம் காட்டப்பட்டது, மேலும் மற்றொரு கொள்ளையன் நாகர்கோயிலை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது,

    கோயிலை கொள்ளை யடிக்க வடநாட்டு கொள்ளை யர்கள் நோட்ட மிட்டு உண்டியலை கொள்ளை யடித்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்று வருகிறது, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் காம்பவுண்ட் சுவருக்குள் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த 2½ அடி ஸ்டீல் உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். இதை யடுத்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ்செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் எங்கு தூக்கி செல்லப்பட்டது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர் மேலும் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆனால் எந்த துப்பும் துலங்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. உண்டியலை கைப்பற்றிய போலீசார், உண்டியலை பார்த்தபோது உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். அந்த கோவில் உண்டியல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேவசம்போர்டு அதிகாரி களால் திறக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஒரு வருடமான நிலையில் திறக்க உள்ள நிலையில், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×