search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ"

    மரக்கன்றுகள் நடும் முகாமில் அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் இன்டர் நேசனல் மாடர்ன் மார்ஷி யல் ஆர்ட்ஸ், மருது வளரிச் சிலம்பம் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டு உலக சாதனை போட்டியை நடத்தியது. இதில் பங்கு பெற்று பதக்கங்களும் சான்றிதழ்க ளும் பெற்று வந்த ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவி களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

    இந்நிகழ்வில் மாஸ்டர் விஜயக்குமார், கிருஷ்ணாபுரம் கூட்டுறவு பேங்க் குட்டி நம்பிராஜன், கிளை செயலாளர் லட்சுமணன், அனந்தப்பன் பழனிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

    இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை யின் சார்பில் மனிதநேய வார விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பா க நடைபெற்று நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நமது மாவ ட்டத்தை பொறுத்தவரையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி பெண் கல்வி ஊக்குவிப்பதற்காக (3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) 11,540 மாணவிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டி லான உதவித்தொகை யினையும், சுகாதார குறை வான தொழில் புரிவோரு க்கான 1711 மாணவ, மாணவிகளுக்கு ரூ.51.33 லட்சம் மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை யினையும், நற்பெயர் பெற்ற பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை பயில்விக்கும் திட்டத்தின் கீழ் 70 மாணவ, மாணவி களுக்கு ரூ.22.88 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகையினையும், விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக 9 கல்லூரி களுக்கு ரூ.86,846 மதிப்பீ ட்டிலான உதவித்தொகை யினையும் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துதல் திட்டத்தின் கீழ் 14 பள்ளி களுக்கு ரூ.50,444 மதிப்பி லான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளி யில் 157 மாணவ, மாணவி களும், 2 கல்லூரி விடுதி களில் 114 மாணவ, மாணவி களும், 28 பள்ளி விடுதிகளில் 720 மாணவ, மாணவிகளும் மற்றும் பழங்குடியினர் நலஉண்டு உறைவிட பள்ளியில் 8 தொடக்க ப்பள்ளியில் 292 மாணவ, மாணவியர்களும், 9 நடுநிலைப்பள்ளிகளில் 410 மாணவ,மாணவியர்களும், 3 உயர்நிலைப்பள்ளிகளில் 496 மாணவ,மாணவிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளில் 597 மாணவ, மாணவிகளும் மற்றும் 2 விடுதிகளில் 66 மாணவ, மாணவிகளும் பயின்ற வருகின்றனர்.

    மேலும் 5166 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்ப ட்டுள்ளது. அரசு அளிக்கி ன்ற நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பெற்று கல்வி கற்கின்ற மாணவ செல்வங்கள் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதோடு தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிப்பு, கண்காணிப்பு குழு உறுப்பினர்களான 16 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரதம், மங்கள இசை, தேவாரபாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் தாட்கோ மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.11 லட்சம் வாகன கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
    • சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    ஒசூர்,

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

    தென் இந்தியாவிற்கான 8-வது தேசிய கராத்தே போட்டி பெங்களூரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 5 வயது முதல் 13 வயது வரையிலான சுமார் 1500 மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். இதில் ஓசூரில் உள்ள ஜப்பான் சோட்டேகான் கராத்தே அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு ,11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்றும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை வென்றும் சாதனை புரிந்தனர். .

    இதனைத் தொடர்ந்து, ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரவி, காரனேசன் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, கராத்தே சங்க மேலாளர் ஜெயராமன் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது.
    • 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

    திருப்பூர் :

    திருப்பூா் புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் போ் பாா்வையிட்டதுடன், ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை நடைபெற்று ள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்ப ட்டிருந்த 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

    இதன் மூலமாக அரசின் திட்டங்கள், வங்கி, கல்வித் துறை சேவை, மருத்துவத் துறை, மகளிா் திட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

    புத்தகத் திருவிழாவை திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதில், 40 ஆயிரம் மாணவ, மாணவி களும் அடங்குவா். இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

    • கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசும்போது, மாணவர்கள் மத்தியில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முடியாது என்று சொல்லும் மாணவர்கள் ஜெயிக்க முடியாது.

    முடியும் என்று சொல்லும் மாணவர்கள் சாதிக்கலாம். உயர்ந்த பதவியை அடைய கடின உழைப்பு கொடுக்க வேண்டும்.

    கடின உழைப்பு என்றால் படிப்பில் முழு கவனம் செலுத்துதல், கடின உழைப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார்.

    பள்ளி படிப்புக்கு பிறகு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஓய்வு பெற்ற விவசாய ஆசிரியர் மதியழகன், கவுன்சிலர் பரமசிவம், பிரஸ் நந்தகோபால் சதாசிவம், வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    2022-23-ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்ப வர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகிய வற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

    திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

    1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவ ர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithrurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04567-232130 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.12.2022. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஓமல்நத்தம் அரசு நடுநிலை பள்ளிக்கு இரும்பு கேட் அமைத்து கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள 148 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு போர்வைகளையும் வழங்கினார்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி துணை செயலாளர் முருகன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து, இளைஞர் அணி ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
    • 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா போட்டிகள், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கடந்த 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பள்ளி அளவில் இப்போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த 3 நாள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கமுதி வட்டாரத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 30 வகையான கலைபோட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெனிட்டாமேரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜெகநாதன், கந்தசாமி, ராஜரஹீக், சந்தனகுமார், கவுசல்யா, நித்யா, நூருல்குதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் டேவிட், ராமச்சந்திரன், நாகராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

    • தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
    • முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வளையப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாந்தினி மூத்தோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மாணவர் தேவஅபிஷேக் மேல் மூத்தோர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    டேக் வோண்டு போட்டியில் மூத்தோர் 52 கிலோ எடைப் பிரிவில் மாணவர் முகேஷ் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    ஜீடோ போட்டியில் மூத்தோர் ஒற்றையர் பிரிவில் மாணவர் மணிகண்டன் 60 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

    தடகள போட்டியில் (நீளம் தாண்டுதலில்) மாணவி நந்தனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டியில் 4.10 மீட்டர் நீளம் தாண்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தண்வந்திரிபிரபு இளைஞர் பிரிவில் தங்கம் வென்று தெற்கு ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிதாளாளர் உதயகுமார், பள்ளி செயலாளர் சவிதா உதயகுமார், இயக்குநர் ஸ்ருதி உதயகுமார், பள்ளி முதல்வர் ஜெயராஜ், பள்ளி துணை முதல்வர் குமரன்,உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், பிரகதீஸ்,அரவிந்த்குமார், மணிமொழி மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
    • பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    தருமபுரி,

    சேலம் பெரியார் பல்கலைக்கழக வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதை போட்டி ஆகியவை பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி

    ஆகிய ஆளுமைகளை மையமாகக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது .

    இதில் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை இரண்டாம் ஆண்டு கணிதவியல் மாணவி ஸ்ரீ ரஞ்சனி கட்டுரை போட்டியில் முதல் பரிசும், முதுநிலை இரண்டாம் ஆண்டு கணிதவியல் பயிலும் மாணவன் சந்துரு கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.

    மேலும் முதுநிலை இரண்டாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் பயிலும் மாணவன் தனுஷ் குமார் பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    பரிசு பெற்ற மாணவ மாணவிகளை பெரியார் பல்கலைக்கழக இயக்குனர் மோகனசுந்தரம், ஆங்கி லத்துறை தலைவருமான கோவிந்தராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×