search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரண தண்டனை"

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுதி அரேபியாவில் கேரள வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • கேரளத்தைச் சேர்ந்த இந்தியரை மீட்க நிவாரண நிதி அளிப்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம் முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்தார்.

    இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதற்கிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.

    இதுதொடர்பாக அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கேரளாவை குறிவைத்து இடைவிடாத வெறுப்பு பிரசாரங்களை எதிர்கொள்வதில் மலையாளிகளின் அடங்காத ஆவி பிரகாசிக்கிறது. கேரளாவின் பின்னடைவு மற்றும் இரக்கத்தை ஒன்றாக நிலைநிறுத்துகிறது.

    சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் கதை இந்த எதிர்ப்பைக் குறிக்கிறது. அவரது விடுதலைக்காக 34 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி. ஐக்கியம், இரக்கம் மற்றும் உண்மையின் உண்மையான கேரளக் கதையை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இக்குற்றம் புரிந்தவர்கள் அங்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிக்கப்பட்டனர்
    • மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மேல்முறையீடு செய்ய உள்ளார்

    பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

    ஆனால், இதுவரை அந்நாட்டில், இக்குற்றத்திற்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக "வாட்ஸ் அப்" செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமையின் (Federal Investigation Agency) சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது.

    இவ்வழக்கு விசாரணை பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.


    இரு மாணவர்களும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறி வந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை குஜ்ரன்வாலா (Gujranwala) நகர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தற்போது இதனை விசாரித்த நீதிபதிகள் 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்தும் 17-வயது மாணவருக்கு - அவர் சிறார் என்பதால் - ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தனர்.

    இரண்டு மாணவர்களும் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    1980களில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்ற காலகட்டங்களில் "இறை நிந்தனை" குற்றத்திற்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக சட்டங்கள் மாற்றப்பட்டன.

    அந்த இரு மாணவர்களை குறித்து தற்போது வரை வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    • உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது
    • தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நாம் முன்னேற முடியாது என்றார் தலைமை நீதிபதி

    பாகிஸ்தானில், 1971லிருந்து 1973 வரை அதிபராகவும், 1973லிருந்து 1977 வரை பிரதமராகவும் இருந்தவர் சுல்ஃபிகர் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto).

    1977ல் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை பதவியில் இருந்து ராணுவ புரட்சி மூலம் தூக்கி எறிந்து பதவிக்கு வந்தார் ஜெனரல் ஜியா-உல் ஹக் (General Zia-ul-Haq).

    1979ல் ஜியாவின் ஆட்சியின் போது, அகமது ரெசா கசூரி (Ahmed Reza Kasuri) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சுல்ஃபிகர் அலி பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது.

    ராவல்பிண்டியில் சுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

    இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், "சுல்பிகர் அலி பூட்டோவின் வழக்கு நியாயமான முறையில் நடக்கவில்லை" என தீர்ப்பளித்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா (Qazi Faez Isa) தலைமையிலான 9-நபர் பெஞ்ச் அளித்துள்ள இந்த தீர்ப்பில், "லாகூர் உயர் நீதிமன்றமும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் முறையான விசாரணை பெற ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை பூட்டோவிற்கு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது முந்தைய தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நம்மை திருத்தி கொண்டு நாம் முன்னேற முடியாது" என கூறியுள்ளது.

    இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேரனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party) தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி (Bilawal Bhutto-Zardari), "3 தலைமுறைகளாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்தோம்" என கூறினார்.

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    • 2022 ஜனவரி முதல் 4 பேரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்
    • பெரிய திட்டத்திற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது

    இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.

    கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
    • தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது33). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ம்ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். ஏமனுக்கு செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனால் நர்சு நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
    • கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.

    புதுடெல்லி:

    கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அதுதொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டனர்.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்தின் மூலம் மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அண்மையில் 8 பேருக்கும் மரண தண்டனையை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டு சட்டக் குழுவுடன் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கத்தார் அதிகாரிகளுடன் நாங்களும் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்தார்.

    • இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.
    • 8 இந்தியர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    கத்தாரில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.

    கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களும் நடப்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம். சர்வதேச நீதிமன்றம் உள்ளது.

    இந்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×