search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள்"

    • 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
    • சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக பல்லடம் அரசு மருத்துவமனை எதிரில் இருந்த நூறாண்டுகளுக்கு மேலான மரங்களை நேற்று வெட்ட முயன்றனர். அப்போது அதனை தடுத்த சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அங்கிருந்த மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது. இதனால் நூறாண்டுக்கும் மேல் பழமையான மரங்கள் முழுமையாக வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
    • உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.

    இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

    உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.

    ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.

    மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

    பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.

    அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.

    தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.

    நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
    • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

    காங்கயம்:

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

    ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.
    • இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம்மிடி ஏரிமலை காப்பு காட்டில் மர்ம கும்பல் தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் பரசு ராமமூர்த்தி உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்த கும்பலை வனத்து றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் காடையாம்பட்டி தாலுகா வீராட்சியூரை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூம ராத்தூர் பகுதியை சேர்ந்த தனக்கொடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெட்டி 4 தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரசுக்கு சொந்தமான காட்டில் இருந்து விலை உயர்ந்த மரத்தை வெட்டி கடத்துவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். மழை , காடு மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டி வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் மரங்களை காடுகளில் நட்டு வரும் வேளையில் 3 பேர் கும்பல் மரங்களை வெட்டியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து பழனிவேல், தனக்கொடி, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் கோட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் முன்னிலையில் வன ஊழியர்கள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    • மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.
    • கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்களையும் மாற்ற வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துணை மின் நிலையத்துக்கு மேலப்பெருமழை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.முருகானந்தம் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்ப தாவது;-

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.

    கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்கள் மாற்ற வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி மின் வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலப்பெருமழை ஊராட்சி முழுவதும் மின் கம்பிகளும் போஸ்ட் மரங்கள் 25-க்கு மேல் மின் கம்பிகள் 9420 மீட்டர் கம்பிகள் பழுதடைந்துள்ளது.

    அந்த கம்பிகளை மாற்ற வேண்டும் .

    அப்படி செய்தால் மட்டுமே எந்த உயிர் சேதமும் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
    • இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு சித்தர் புரத்தில் மறைந்த ராஜேந்திரா சுவாமிகள் நிர்மாணித்த ரீ சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள் புரிகின்றனர்.

    இந்த ஓளிலாயத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களைப் பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீ சத்குரு ராஜேந்திரா சுவாமிகளின் 5ம் வருட மகா குருபூஜை விழா பஞ்சபூத ஸ்தல சிவசக்தி மகாயாக வைபவம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. காலை குருபூஜை பஞ்சமுக தல சிவசக்தி மகாயாகம் நடைபெறுகிறது.

    மதியம் 12 மணியளவில் இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.

    நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, முன்னால் எம்.எல்.ஏ சக்தி ஆகியோர் வழங்கி துவக்கி வைக்கின்றனர்.

    ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி. செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி பரதன் மற்றும் ராஜேந்திரா சுவாமிகள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. முக்கியமாக சைக்கிள் மற்றும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன.
    • குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மூடை நெல்லுக்கு ரூ.40 கமிஷன் பெறப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வசந்தி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் அரவிந்த் விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகளின் விவரங்கள் வருமாறு:-

    சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. முக்கியமாக சைக்கிள் மற்றும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன.

    குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மூடை நெல்லுக்கு ரூ.40 கமிஷன் பெறப்பட்டது. அதுவே கடந்த மார்ச் மாதத்தில் ரூ.35 வாங்கப்பட்டது. இதற்காக எந்த ரசீதும் கொடுப்பது இல்லை. மேலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் மார்க்கெட்டில் நெல்லுக்கு நல்ல விலை இருக்கிறது. நெல் பயிர்களுக்கு திரவ வடிவிலான யூரியா அடிக்கலாமா? மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலையம் இந்தியாவிலேயே கேரளா வில் மட்டும் தான் உள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு அங்கிருந்து வழங்கப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சிகள் தான் குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டது. இந்த நிலையில் புதிய ரக மரவள்ளி கிழங்குகள் அங்கு உள்ளன. எனவே அவற்றின் குச்சிகளை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும். இல்லை எனில் குமரி மாவட்ட தோட்டக்கலை துறை மூலமாக மரவள்ளி கிழங்கு குச்சிகளை உற்பத்தி செய்து தர வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்த வேண்டும். பழத்தோட்டம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விழா கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாய பிரதிநிதிகள் கூறினர்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சிற்றார் 2 அணை பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. குருந்தன்கோடு நள்ளிக்குளம் கரை அருகே முள்வேவி அமைத்து இருப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மில்லுக்கு நெல் மூடைகளை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்காக பணம் கேட்டு இருக்கலாம். நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்தால் விவசாயிகள் தங்களது நெல்லை மார்க்கெட்டிலேயே விற்பனை செய்யலாம். நெல் பயிர்களுக்கு திரவ வடிவிலான யூரியாவை பயன்படுத்தலாம். கேரளாவில் இருந்து புதிய ரக மரவள்ளி கிழங்கு குச்சிகள் வெளியிடப்பட்டதும் அது பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். கிஷான் மேளா நடத்தப்படும் போது விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    முன்னதாக திருவட்டார் மாத்தாரை சேர்ந்த இயற்கை விவசாயி மைக்கேல் என்பவர் தான் இயற்கை முறையில் விளைவித்த சீனிக்கிழங்கு மற்றும் சிகப்பு வாழைப்பழம் ஆகியவற்றை கலெக்டரிடம் காண்பித்தார். அந்த சீனி கிழங்கு வழக்கமான சீனிக்கிழங்கை காட்டிலும் அதிக எடை இருந்தது. அதாவது ஒரு கிழங்கு சுமார் 3 கிலோ வரை எடை இருந்தது. இதையடுத்து அந்த விவசாயியை கலெக்டர் அரவிந்த் பாராட்டினார்.

    • மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள விருட்ச வனம் மரங்கள் சரணாலயத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    "வன வளத்தை பெருக்கினால் அது நாட்டு வளத்தைக் கூட்டும்" தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பேணிக்காக்கும் நோக்கத்துடனும் இயற்கையாக வளர்ந்து வரும் உள்ளூர் மரங்கள், அரிய வகை மர வகைகள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உதவியாக உள்ள மரங்களை பேணிப் பாதுகாக்கவும், வளரும் தலைமுறையினருக்கும் மற்றும் அனைவருக்கும் மர வகைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் அவற்றை நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15.9.2021 அன்று தொடங்கப்பட்டது.

    இந்த விருச்சவனத்தில் நெட்டிலிங்கம், மடகாஸ்கர் பாதாம், கருங்காலி, வெள்ளை கருங்காலி, உசிலை மரம், கோணப்புளி, இலுப்பை, புன்னை, சப்போட்டா, நார்த்தை, மலைவேம்பு, வெங்காரை, சில்வர் டிரம்பட், வெப்பாலை, கூட்டுப்பின்னை, வாட்டர் ஆப்பிள், கிடாரங்காய், புரசு, ஆப்பிள், புளுமேரியா வெள்ளை, காட்டு பின்னை, அரசமரம், மஞ்சக்கடம்பு, வெண்தேக்கு,

    குரங்கு வெற்றி லை, அத்திமரம், இலந்தை, நறுவிளி, பலா, புளுமேரியா சிவப்பு, தான்றிக்காய், பரம்பை, கருவாலி, தடசு, இத்தி இச்சி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, ஆட்டுக்கொம்பொடி மரம், திருஓடு (உருண்டை), வெல்வெட்மரம், வன்னிமரம், வெள்ளை மந்தாரை, காசி வில்வம், மாவிலங்கை, ருத்ராட்சம்,

    திருஓடுநீளம், சிலோன் வுட், புளிச்சக்காய், மர தொரட்டி, கிளுவை, காட்டரசு, நஞ்சுண்டான், காட்டு துவரை, முள்ளில்லா மூங்கில், டிராகன் பழம் உள்பட 216 மர வகைகளை உள்ளடக்கிய "விருட்ச வனம்" என்ற மரங்கள் சரணாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதோடு மட்டுமில்லாமல் இந்த சரணாலயத்திலே பன்முக த்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை பள்ளி மாணவ மாணவ செல்வங்கள் சிறுவயதிலே அறியும் வகையில் காய்கறி தோட்டம், புங்கனூர் பசு, காளை, முயல் பண்ணை, உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    விரைவில் 100 நபர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சரணாலயத்தில் அமையப் அமையப்பெறவுள்ளது.

    இதன் மூலம் இயற்கை மரவகைகள் பாதுகாக்க ப்படுவதோடு சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இதனை காண வரும் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள்மற்றும் பொது மக்கள் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரம் வளர்ப்பதில்ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்து டன் விருட்சவனம் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், (வருவாய்) மரு.சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சங்கர், தாசில்தார் மணிகண்டன், திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில்1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும்வென்றான், அயன் பொம்மையாபுரம், கீழ விளாத்திகுளம், காட்டுநாயக்கன்பட்டி, வில்வமரத்துபட்டி, பி.மீனாட்சிபுரம், ஆதனூர், கே.சுந்தரேஸ்வரபுரம், ராமச்சந்திராபுரம், டி.சண்முகபுரம், கமலாபுரம் உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், வட்டாட்சியர்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராகவன், சந்திரசேகர், தி.மு.க . ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, பேரூராட்சித் தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம் தூய காற்று தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகம்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதுவரை வரை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப்தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கலெக்டர் தலைமையில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினத்தை முன்னிட்டு மாணவ -மாணவியர்கள் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயப்பிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், இணைச் செயலாளர் பொறியாளர்முத்துக்குமார், பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் செபாஸ்டின், முதல்வர் சகோதரி பிரமிளா, கவின்மிகு தஞ்சை இயக்க உறுப்பினர்கள் செல்வராணி, கவிஞர் ராமதாஸ், தன்னார்வலர்கள் இளவரசன், பிரபாகர், ரவிக்குமார், குரு பிரசாத், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன.
    • பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

    இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடந்த 1952-ம் ஆ

    ண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்தது. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×