search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கியது
    X

    குன்னூரில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கியது

    • பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன.
    • பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

    இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடந்த 1952-ம் ஆ

    ண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்தது. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×