search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம்  கிராமங்களில் 1 கோடி மரங்கள்  நடும் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்
    X

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    விளாத்திகுளம் கிராமங்களில் 1 கோடி மரங்கள் நடும் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்

    • 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில்1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும்வென்றான், அயன் பொம்மையாபுரம், கீழ விளாத்திகுளம், காட்டுநாயக்கன்பட்டி, வில்வமரத்துபட்டி, பி.மீனாட்சிபுரம், ஆதனூர், கே.சுந்தரேஸ்வரபுரம், ராமச்சந்திராபுரம், டி.சண்முகபுரம், கமலாபுரம் உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், வட்டாட்சியர்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராகவன், சந்திரசேகர், தி.மு.க . ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, பேரூராட்சித் தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×