search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒளிலாயத்தில், நாளை மகா குருபூஜை
    X

    ஒளிலாயத்தில், நாளை மகா குருபூஜை

    • 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
    • இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு சித்தர் புரத்தில் மறைந்த ராஜேந்திரா சுவாமிகள் நிர்மாணித்த ரீ சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள் புரிகின்றனர்.

    இந்த ஓளிலாயத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களைப் பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீ சத்குரு ராஜேந்திரா சுவாமிகளின் 5ம் வருட மகா குருபூஜை விழா பஞ்சபூத ஸ்தல சிவசக்தி மகாயாக வைபவம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. காலை குருபூஜை பஞ்சமுக தல சிவசக்தி மகாயாகம் நடைபெறுகிறது.

    மதியம் 12 மணியளவில் இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.

    நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, முன்னால் எம்.எல்.ஏ சக்தி ஆகியோர் வழங்கி துவக்கி வைக்கின்றனர்.

    ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி. செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி பரதன் மற்றும் ராஜேந்திரா சுவாமிகள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×