search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்"

    • சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    நாளை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    ஏற்கனவே, கடந்த வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

    • அமித்ஷா இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
    • ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    அதன்படி, இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனிக்கு செல்ல அமித்ஷா திட்டமிருந்தார்.

    தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்வதாக நேற்று அறிவித்தார்.

    மேலும், அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்றிரவு மதுரை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    • தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    அதன்படி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்ல இருந்தார்..

    தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.

    மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
    • அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.
    • மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் பொறுப்புத் தொகையும் ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.

    டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.

    05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

     

    • சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
    • மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    • தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சந்திப்பு.
    • சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தல்.

    தமிழக எம்.பிக்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்ஷாவை சந்தித்தனர்.

    டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

    அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறும், சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறும் எம்.பி.க்கள் குழு அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சந்திப்பின்போது, திமுக- டி.ஆர்.பாலு, ம.தி.மு.க- வைகோ, சி.பி.ஐ- சுப்பராயன், சி.பி.எம்.- நடராஜன் உள்ளிட்டோர் அமித்ஷாவுடன் சந்தித்தனர்.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் சட்சி- ரவிக்குமார், ஐ.யு.எம்.எல்- நவாஸ் கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி- சின்ராஜ் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர்.

    • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

    நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

    "வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

    10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

    • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
    • மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் நிவாரணத் தொகை வழங்கவில்லை.

    தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.

    மிச்சாங் புயல், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

    இந்நிலையில், வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் எவ்வித நிவாரண தொகையும் பெறப்படவில்லை.

    மற்ற மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோது குறுகிய காலத்தில் மத்திய அரசு நிவாரண நிதியை வழங்கியது.

    தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனே வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசனை.
    • தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் விவாதம்.

    தமிழக மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.

    பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கூட்டத்தில் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    மழை வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட, பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.Tamil Nadu Flood Damage - Prime Minister's Office Advisory

    • மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள் கல்லூரியில் இன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து உரையாடுதல் மற்றும் பத்தாண்டு கால சாதனைகள் , திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வந்தார்.

    பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

    அப்போது மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென விழிப்புணர்வு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கெமிக்கல் வாயுவை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

    மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
    • கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்

    இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).

    ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.

    "பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.

    இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×