என் மலர்
நீங்கள் தேடியது "Union Minister Rajnath Singh"
- மக்களவை மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர நிறைவு பெறவில்லை.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் (செவ்வாய்க் கிழமை) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதத்தின்போது ஏற்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது.
அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், போரை நிறுத்த உதவியதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அவர்," நோக்கம் நிறைவேறியதால்தான் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. டிரம்ப் கூறியதால் இல்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டுமே இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கியது. 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர நிறைவு பெறவில்லை. தேவைப்பட்டால் ஆபரேஷன் சந்தூர் தொடரும்.
பாகிஸ்தான் விமான தளங்கள் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி பரும் சேதமடைந்ததால், மோதலை நிறுத்த பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.
பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்த கோரிக்கை வைத்தது" என்றார்.
- அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
- மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.
மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமையும் இடைவிடாமல் 30 மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புயலுக்கு பிறகு தமிழக அரசு தரப்பில் மீட்பு பணிகள் ஒரு புறம் துரிதமாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
மின் வெட்டு, உணவு கிடைக்காமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
- அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நம் அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்டு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களை திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இணைப்பு சாலைகள் இருப்பதால், இந்த பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும்.
தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூழ்கப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை.
எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.
- இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷியா செல்கிறார்.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள் அன்று கலினின்கிராட்டில் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார். உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஐ.என்.எஸ். துஷில்' போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ரஷிய சுற்றுப்பயணத்தின்போது ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







