search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு செல்கிறார்கள் - ராஜ்நாத் சிங் கிண்டல்
    X

    தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு செல்கிறார்கள் - ராஜ்நாத் சிங் கிண்டல்

    ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சுர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதுவரை அவர்கள் கோவில்களுக்கு செல்வதில்லை. 



    தேர்தல் காலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினர் கோவில்கள் மற்றும் பசுக்களை வணங்கி வருகின்றனர். ஆனால் பாஜகவினருக்கு அப்படி அல்ல.

    பசுக்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வணங்குவது அவர்களது வாழ்க்க்கையின் ஓர் அங்கமாகும் என தெரிவித்தார்.

    முன்னதாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவ தயாராக இருக்கிறது என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    Next Story
    ×