என் மலர்
இந்தியா

3 நாள் சுற்றுப்பயணம்- நாளை ரஷியா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
- இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.
- இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷியா செல்கிறார்.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள் அன்று கலினின்கிராட்டில் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார். உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஐ.என்.எஸ். துஷில்' போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ரஷிய சுற்றுப்பயணத்தின்போது ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






