search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பீடு"

    • ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் சிலம்பம் இந்தியா சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான ஒரு நாள் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

    சிலம்பம் இந்திய சங்கத்தின் தந்தை சந்திரமோகன், சிலம்பம் இந்திய சங்கத்தின் தலைவர் பொன்ராமர், செயல் தலைவர் கண்ணதாசன், பொதுச்செயலாளர் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்திய சிலம்ப சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிலம்ப பயிற்றுநர்கள் ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட போட்டிகள் முதல் அகில இந்திய போட்டிகள் நடத்துவதற்கான விதிமுறைகள், பயிற்றுனர், நடுவர்களுக்கான, உடை விதிமுறைகள், மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், தொடு முறை பயிற்சிகளை எவ்வாறு நடத்தி தர வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, 100 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வும் நடை பெற்றது.

    தேர்வின் அடிப்ப டையில் பயிற்றுநர்களுக்கு கிரேடு சான்றிதழ் இந்திய சிலம்ப சங்க பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சிலம்பம் தஞ்சாவூர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். முகாமின் செயல்முறைகள் மற்றும் வழிபாட்டு நிபந்தனைகள் தஞ்சையை சேர்ந்த ரெங்கநாயகி மற்றும் சங்கீதா ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தினர்.

    இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்த ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    களியல்-அழகியபாண்டி யபுரம் கூட்டுத்குடிநீர்த் திட்டத்தில் குழாய் பதிப்ப தற்காக சாலை உடைக்கப்பட்ட நிலை யில், களியல் முதல் உண்ணியூர்கோணம் வரையிலான 3.5 கி.மீ. பகுதிகள் சீரமைக்கப்படா மல் கிடப்பில் போடப்பட் டன.

    இந்நிலையில் இந்த சாலையை ரூ.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திற்பரப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், திற்பரப்பு பேரூர் செயலாளர் ஜான் எபனேசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூ ராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    திற்பரப்பு அருவியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், தமிழக அரசு சார்பில் திற்பரப்பு அருவியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள் ளன. தற்போது அருவிக்கு செல்லும் பாதையில் மாற்று ஒரு வழிப்பாதை அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அருவிப்பகுதியில் அரசுத்துறை சார்பில் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்), கட்டுவது என்றும் கூடுதல் கழிப்பறைகள், கோவில் எதிரே உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் பாலத்தை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையில் மழை காலங்களில் தேங்காப்பட்டணம் பனங்கால் முக்கு பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழயாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அவர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் தேங்காய்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் சாலையை உயர்த்தி தார் போடும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் அலி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் ஷேக்முகமது, அசோகன், சசிதரன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
    • ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கிள்ளியூர் பேரூராட்சிக் குட்பட்ட, மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் உள்ள பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் இந்த அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இவர்களின் கோரிக்கை யை ஏற்று மாங்கரையில் பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி, குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டி டம் அமைக்க அடிக்கல் நாட்டி பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கொள்ளிடம் ஆற்று படுகையில் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது.
    • நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று படுகையில் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

    இந்த நீரேற்று நிலையம் மூலமாக தினமும் 17 ஆயிரத்து 296 மில்லியன் லிட்டர் குடிநீர் திருச்சி மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட திருவெறும்பூர், காட்டூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள 6 மாநகராட்சி வார்டு மக்களுக்கும், துவாக்குடி நகராட்சி சேர்ந்த அனைத்து வார்டு மக்களுக்கும், கூத்தப்பார் பேரூராட்சி மக்களுக்கும்,

    அது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள 90 குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 22-ந்தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து தற்காலிகமாக அதனை சீரமைக்கும் பணிக்காக ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லும் பாலம் கடந்த அக்டோபர் 14-ந்தேதி சேதம் அடைந்தது. மேலும் ஆற்றில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாக ஏற்பட்ட அரிப்பினால் பாலத்தின் தூண்களில் ஒன்றும் கீழே விழுந்து விட்டது.

    இதனால் பாலத்தில் இருந்து நீர்வழிப் பாதை சேதமடைந்தது.பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக சீர் செய்து அக்டோபர் 20-ந்தேதி முதல் குடிநீர் விநியோகிக்கும் பணியை தொடங்கினர். ஆனால் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மறுபடியும் அக்டோபர் 22-ந்தேதி பாலம் மேலும் சேதம் அடைந்ததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

    அதை சரி செய்த பிறகு அக்டோபர் 23-ந்தேதி மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கினர். ஆனாலும் பாலத்தில் மேலும் இரண்டு தூண்கள் கீழே இறங்கி விட்டதால் அவர்களால் அதை தொடர முடியவில்லை. பின்னர் பல தொழில்நுட்ப வழிமுறைகளை கையாண்டு சீரமைத்து ஓரளவுக்கு தண்ணீர் உபயோகித்தை தொடங்கியுள்ளனர்.

    இருப்பினும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மேலும் இந்தத் திட்டம் தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் நிரந்தரமாக மேற்கண்ட குடிநீர் திட்ட பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சேதுமடைந்த இரும்பு குழாய்கள் தற்காலிக நடவடிக்கையாக அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மேலும் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.3 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை பிரேயர் சென்டர் செல்லும் சாலையையும், கே.ஆர்.புரம் - பூந்தோப்பு காலனி செல்லும் சாலையையும் இணைக்கும் விதமாக ஏ.வி.எம்.கால்வாயின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் புதிய பாலம் அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே புதியபாலம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இரவிபுத்தன்துறை ஆலய அருட்பணி யாளர் ரெஜீஷ் பாபு, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
    • சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் கொத்த மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரடியாக கடிதம் எழுதி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளார்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளில் முக்கியமாக, திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

    விரைவில் அது நிறைவேற்றப்படும். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

    இந்த ஊராட்சியிலும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், கிராம சபை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள், அனந்தநல்லூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்
    • 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழி லாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் வேதியி யல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமையலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து தலைமையா சிரியர்களிடம் விவரம் கேட்கப்பட்டது.

    மாணவ, மாணவிகள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோதனை மேற்கொள்வ தோடு, ஒவ்வொரு நாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், ரூ.1.92 லட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடை மட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தோடு பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, ரூ.4.29 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையினையும் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    தொடர்ந்து, ஈசாந்தி மங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணி என யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி2022-2023-க்கானமாணவ- மாணவிகள்சேர்க்கை தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர், சாமிய ப்பா கூட்டுறவு மேலா ண்மை நிலையம், மருத்து வக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 007

    இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்ச்சியும், 01.08.2022 அன்று 17 வயது பூர்த்தியடை ந்தவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்ெதாகை பெற்று த்தரப்படும். முன்னாள் இராணுவ த்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சி யை பெறலாம்.விபரங்களை பெறுவத ற்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் தொலைபேசி எண்: 04362- 238253, 237426 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்து ள்ளார்.

    ×