search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காப்பட்டணம்"

    • குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில்
    • பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது


    நாகர்கோவில் : குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னித் தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பால விளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய பகுதி களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
    • 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.

    இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.

    ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையில் மழை காலங்களில் தேங்காப்பட்டணம் பனங்கால் முக்கு பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழயாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அவர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் தேங்காய்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் சாலையை உயர்த்தி தார் போடும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் அலி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் ஷேக்முகமது, அசோகன், சசிதரன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்து வாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எத்திரம் பொருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரி கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொ ழுது மீன்பிடிப்பு மற் றும் மீன்விற்பனை தொடர் பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூல மாக அறிவிப்பு வழங்கப்பட் டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை.

    எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங் களில் இருந்தும் பாது காப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற் கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகு களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அறிவிக் கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • தேங்காய்பட்டணம் துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், விஜய்வசந்த் எம்.பி., ராேஜஷ்குமார் எம்.எல்.ஏ., கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளான கல்குவாரிகளை முறைப்ப டுத்துவது, தேங்காய்பட்ட ணம் துறைமுக பணிகளை துரிதப்படுத்துவது, சாலை களை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்டத்திற்குட் பட்ட தேசிய நெடுஞ்சாலை களை சீரமைக்க ரூ.15 கோடி யில்நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படுவதோடு, தேங்காய்பட்டணம் துறைமு கத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் முன்பு 39 கல்குவாரிகள் இயங்கி வந்தன.

    தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்ற சூழலில் தற்போது கன்னியா குமரி மாவட்டம் வழியா கேரளாவிற்கு அதிக பாரத் துடன் கனரக வாகனங்கள் மூலமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவ தாக ஏராளமான குற்றச் சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக் கைகள் எடுத்ததன் விளை வாக ரூ.2 கோடிக்கும் மேலாக அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட எல்லை பகுதியில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் மூலம் கனிமவள பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது, எடைமேடை கள் அமைப்பது, களியக்கா விளை மற்றும் ஆரல்வாய் மொழி சோதனை சாவடி களில் எடை மேைடகள் அமைப்பதோடு கண்காணிப்புகளை தீவிரப் படுத்தப்படவுள்ளது. வெகு விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி முறைப் படுத்தவும் திட்டமிட்டுள் ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள எந்த கல்குவாரியில் இருந்தும் கேரளாவுக்கு கற் களை எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடை சீட்டு அனுமதி வழங் ப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நமது குமரி மாவட்டம் வழி யாக கேரளாவுக்கு கனிமங் கள் கடத்தப்படுவதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாது குமரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கற்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏது வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    குமரி மாவட்ட கல்குவாரி களில் முைறகேடாக கற்கள் வெட்டப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இக் குழுவின் மூலம் கல்குவாரி களில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல் குவாரி உரிமையாளர் கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.

    ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

    காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி, தமிழக அரசு ரூ.43 கோடி ஒதுக்கீடு

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் துறைமுக மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆலோசனை மேற் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட் டணம் துறைமுகம் மேம் பாட்டு பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதி கள் உள்ளிட்டோர்களுட னான கலந்தாய்வுக்கூட் டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தொழில்நுட்ப காரணங்க ளால், முகத்துவாரப் பகு திகளில் பல உயிரிழப்பு கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தேங்காப்பட்ட ணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசித்துவரும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மாவட்ட நிர்வா கத்திற்கு உயிரிழப்பு கள் ஏற்படுவதை தடுப்பதற் கான மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மீன்பி டித்துறைமுக முகத்துவா ரத்தை ராட்சத இயந்திரம் கொண்டு ஆழப்படுத்துவற் கான நடவடிக்கை விரை வில்மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    துணை இயக்குநர் (மீன்வளத்துறை) காசி விஸ்வநாத பாண்டியன், கலெக்டரின் நேர்முக உத வியாளர் (பொது) வீரா சாமி, ஊசூர் மேலாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள் ஜார்ஜ் ராபின்சன், ஜோர்தான், பினுலால்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகதிட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி. தமி ழக அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்து ஒரு வாரத் தில் இதற்காக அரசாணை வெளியிட உள்ளது.

    துறைமுக முகதுவா ரத்தில் மணல் அள்ளும் பணிக்கு புனேயில் இருந்து இயந்திரம் ரூ.31.18 கோடியில் வர உள்ளது. செப்டம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மண் அள் ளும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் கள். அவ்வாறு தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மீன்துறை இயக்குநர் பழனிசாமி, ராஜேஷ்குமார் எம். எல்.ஏ உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறு கையில், 'மீனவர்களுக்கு பாதுகாப்பான வகையில் துறைமுகத்தை மறுசீர மைப்பு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில், நியாட், சிடபிள் யூபி ஆர்.எஸ்., ஐஐடி மற் றும் மீன்வளத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர் களை வரவழைத்து பல கட்ட ஆய்வுகளை மேற் கொண்டு, உள்ளூர் மீன வர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.

    அதன்பின்னர் தமிழக அரசு திட்டத்திற்கான கருத்துரு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந் தது. இது குறித்து கடந்த 21.04.2022 அன்று நடை பெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 12-வது கூட்டத் தில், துறைமுக உட்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் பிரதான அலைதடுப்பு நீட்டிப்பு சுவர் ஆகிய இரண்டு பணிகளையும் ஒரே கருத்துருவாக்க கேட் டுக்கொண்டதற்கிணங்க, தமிழக அரசு மீண்டும், இரு பணிகளையும் ஒரே கருத் துருவாக்கி ரூ.253 கோடிக் கான திட்டத்தை அனுப்பி வைத்தது. அதனை கடந்த 29.07.2022 அன்று நடை பெற்றகூட்டத்தில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்கா ணிப்பு குழு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதலுக் காக பரிந்துரை செய்தது.

    துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த தற்போது பணியில் இருக்கும் இயந்திரங்களை விட கனரக ட்ரெட்ஜிங் இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. துறைமுக பணிக்கான மத்திய அரசின் ஒப்புதல் ஓரிருநாட்களில் கிடைத்த தும், உடனடியாக டெண் டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற் கான பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செயல்ப டுத்தி வருகிறது.

    எனவே, மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து பணிகள் தொடங்கும் வரை அமைதி காக்க வேண்டும். லைப் ஜாக்கெட் அணிந்து படகில் பயணிப்பது, இயற்கை  சீற்றநேரங்களிலும், ஆபத்தான பகுதிகளி லும் உயிர் காக்க உதவும். துறைமுக பணிக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், லைப் ஜாக் கெட் அணிவது குறித்தும் தவறான கருத்துக்களை யாரும் அரசியல் லாபத்திற்காக பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
    • தேங்காய் பட்டணம் மீன்பிடி துறை முக புனரமைப்பு திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வருகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் நல்ல முடிவு வரும்.

    குமரி மாவட்டத்தில் ஐ.டி பார்க் அமைக்க கோணத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை, சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் அவை திறக்கப்படும்.

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கும்போது கொண்டு வரப்பட்ட திட்டமாகும். 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அந்த பணிகள் முடிக்கப்பட்டது.

    பணிகள் நடந்து வரும் போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. துறைமுகத்தின் முகப்பு தோற்றத்தில் ஏற்படும் மணல் குவியலின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது.

    கனிமொழி எம்.பி. துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு உறுதி அளித்தார். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மீன் துறை அமைச்சர் நேரில் வந்து ஆய்வு நடத்தினார். நானும் கலெக்டரும் 3, 4 முறை கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்துள்ளோம்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளூர் மீனவ மக்களுடன் ஆலோசிக்க ப்பட்டது. நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக ஐ.ஐ.டி. உள்ளிட்ட துறை நிபுணர்கள் மற்றும் மீனவ மக்களின் கருத்துக்களும் கேட்டனர்.

    இதையடுத்து ரூ.248 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி உதவிக்கான அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தற்போது ஏற்றுக் கொண்டு உள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு துறைமுக பணிகள் தொடங்கும்.

    தற்போது அற்ப காரணங்களுக்காக போராட்டங்களை அறிவித்துள்ளனர்.நிச்சயம் திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும். மோசமான கடல் சூழலில் மீனவர்கள் அந்த பகுதியில் மீன் பிடிப்பது தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி அந்த பகுதியில் மீன் பிடிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகிறோம்.

    தி.மு.க. அரசு முனைப்போடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறை முக புனரமைப்பு திட்ட மும் முழுமையாக நிறைவேற்றப்படும்.இந்த நேரத்தில் போராட்டம் அறிவித்துள்ளது என்பது ஒரு நாடகமாகவே பார்க்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள்.

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகத்தில் தூத்தூர், இனயம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் 850 விசைப்படகுகள், ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட வள்ளங்கள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் மீன்பிடித் துறைமுகம் சரியான முறையில் கட்டமைப்பு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. காரணம் வருடத்தில் இரண்டுமுறை ஏற்படும் கடல் சீற்றத்தால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் குவியல்கள் ஏற்படுவதால், மீனவர்களின் படகுகள் முகத்துவார பகுதியில் எழும்பும் கடலலையில் சிக்கி படகுகளும், வள்ளங்களும் கவிழ்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆதலால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை மறுக்கட்டமைப்புடன் சீர் செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மீனவர்கள் துறைமுக முகத்துவாரத்தில் மண் அள்ளும் பணியை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி, முகத்து வாரத்தில் மண் அள்ளும் பணி துவங்கும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என சொல்லி நுழைவாயில் பகுதியில் கறுப்பு கொடி கட்டி அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகள் மீன் வாங்குவதற்கும், மீன் விற்பதற்கும் வரவில்லை.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 30 லட்சம் மதிப்பில் மணல் உறிஞ்சும் தற்காலிக இயந்திரம் நேற்று தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தது. கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து அவசர தேவைக்காக இந்த இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ள தாக தெரிகிறது. உடனே இயந்திரத்தை பொருத்தும் பணியும் துவக்கபட்டது. எந்திரம் முழுவதும் பொருத்தி முடிந்த உடன் இரண்டு தினங்களில் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் உறிஞ்சி அகற்றும் பனி துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால் இந்த தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வந்தது மீனவர்களை ஏமாற்றும் செயல் என மீனவர்களில் ஒரு தரப்பினர் பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காரணம் மணல் உறிஞ்ச ட்ரெட்ஜ்ஜர் என கூறப்படும் இயந்திரம் தான் பயன்படுத்துவது வழக்கம். இது நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்படும். ஆனால் அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள். மட்டுமின்றி, ட்ரெட்ஜ்ஜர் எந்திரத்தை கொண்டு வராவிட்டால் வரும் செவ்வாய் முதல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    அதேநேரம் குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரடி கென்னடி கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக ஒருசிலர் இந்த பிரச்சனையை தூண்டி விடுகின்றனர். அதிகாரிகள் அறிவித்த படி விரைவான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதையும் மீறி போராட்டம் நடத்துவது மீனவர்களை பாதிக்கும் செயல். துறைமுக கட்டுமான பணிகளிலும் முடக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த போராட்டத்துக்கு பெரும்பான்மை மீனவர் கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக மீன்பிடித் துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், தொழிலா ளர்கள் ஆதரவு இல்லை என கூறினார்.

    அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது.-

    11-ந்தேதி பூந்துறை மீனவர் இறப்பினை தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாக மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறு தியின் படி, அலை தடுப்பு சுவர் பணிகள் அடுத்த தினம் துவங்கப்பட்டது., மணல் அள்ளுவதற்காக குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டு தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரெஜ்ஜர் எந்திரம் கொண்டு வர வேண்டும் என்றால் நாகபட்டணத்தில் இருந்து கொண்டு வர வேண்டும், அதற்கு அரசின் உத்தரவு மற்றும் அரசு நிதி குறைந்த அளவு 2 கோடி ஒதுக்க வேண்டும்.

    அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து, அது தேங்காப்பட்டணம் வந்து சேர வேண்டும் என்றால் 3 மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அதனால்தான் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் ட்ரெஜ்ஜர் இயந்திரம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் விரைந்து நடந்து வருகிறது. மட்டுமின்றி துறைமுக பனி முடியும் போது நிரந்தர ட்ரெஜ்ஜர் எந்திரம் அமைக்க படும் என கூறினார்கள்.

    ×