search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கட்டுமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை
    X

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கட்டுமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • தேங்காய்பட்டணம் துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், விஜய்வசந்த் எம்.பி., ராேஜஷ்குமார் எம்.எல்.ஏ., கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளான கல்குவாரிகளை முறைப்ப டுத்துவது, தேங்காய்பட்ட ணம் துறைமுக பணிகளை துரிதப்படுத்துவது, சாலை களை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்டத்திற்குட் பட்ட தேசிய நெடுஞ்சாலை களை சீரமைக்க ரூ.15 கோடி யில்நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படுவதோடு, தேங்காய்பட்டணம் துறைமு கத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் முன்பு 39 கல்குவாரிகள் இயங்கி வந்தன.

    தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்ற சூழலில் தற்போது கன்னியா குமரி மாவட்டம் வழியா கேரளாவிற்கு அதிக பாரத் துடன் கனரக வாகனங்கள் மூலமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவ தாக ஏராளமான குற்றச் சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக் கைகள் எடுத்ததன் விளை வாக ரூ.2 கோடிக்கும் மேலாக அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட எல்லை பகுதியில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் மூலம் கனிமவள பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது, எடைமேடை கள் அமைப்பது, களியக்கா விளை மற்றும் ஆரல்வாய் மொழி சோதனை சாவடி களில் எடை மேைடகள் அமைப்பதோடு கண்காணிப்புகளை தீவிரப் படுத்தப்படவுள்ளது. வெகு விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி முறைப் படுத்தவும் திட்டமிட்டுள் ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள எந்த கல்குவாரியில் இருந்தும் கேரளாவுக்கு கற் களை எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடை சீட்டு அனுமதி வழங் ப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நமது குமரி மாவட்டம் வழி யாக கேரளாவுக்கு கனிமங் கள் கடத்தப்படுவதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாது குமரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கற்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏது வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    குமரி மாவட்ட கல்குவாரி களில் முைறகேடாக கற்கள் வெட்டப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இக் குழுவின் மூலம் கல்குவாரி களில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல் குவாரி உரிமையாளர் கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×