search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி
    X

    சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திற்பரப்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்த ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    களியல்-அழகியபாண்டி யபுரம் கூட்டுத்குடிநீர்த் திட்டத்தில் குழாய் பதிப்ப தற்காக சாலை உடைக்கப்பட்ட நிலை யில், களியல் முதல் உண்ணியூர்கோணம் வரையிலான 3.5 கி.மீ. பகுதிகள் சீரமைக்கப்படா மல் கிடப்பில் போடப்பட் டன.

    இந்நிலையில் இந்த சாலையை ரூ.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திற்பரப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், திற்பரப்பு பேரூர் செயலாளர் ஜான் எபனேசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூ ராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    திற்பரப்பு அருவியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், தமிழக அரசு சார்பில் திற்பரப்பு அருவியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள் ளன. தற்போது அருவிக்கு செல்லும் பாதையில் மாற்று ஒரு வழிப்பாதை அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அருவிப்பகுதியில் அரசுத்துறை சார்பில் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்), கட்டுவது என்றும் கூடுதல் கழிப்பறைகள், கோவில் எதிரே உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் பாலத்தை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.

    Next Story
    ×