search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிழ்ச்சி"

    • திருச்சியில் ரூ.1000 வாங்கிய குடும்ப தலைவிகள்
    • சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது.

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி 2023- 24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்தி ற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ண ப்பங்கள் தேர்வு செய்யப்ப ட்டன.

    தற்போது இந்த திட்ட த்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அண்ணா பிறந்த நாளான இன்று காஞ்சிபுர த்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொ டங்கி வைப்பதாக முதலமை ச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.

    தமிழகத்தில் பெரும்பா லான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

    திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

    எனது கணவர் மரக்க டையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறா ர்கள். நான் எந்த வேலை க்கும் செல்லாமல் குழந்தைக ளை பராமரித்து வருகிறேன்.

    சில நேரங்களில் குழந்தை களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

    கலைஞர் உரிமை த்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா,

    நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோ ஷமாக இருந்தது.

    எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத் தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமை ச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    • தடை நீக்கத்திற்கு பிறகு கடல்பாசி சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் கடல்பாசிகள் சேகரிப்பதற்கான தடை நீக்கத்திற்கு பிறகு தற்போது கடல்பாசிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கடற்பாசிகள் 180 மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதிகள், பாறைபகுதிகள், பவளப்பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரை பகுதிகள், குஜராத், லட்சத்தீவு, அந்த மான் நிகோபார் கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 1,153 வகை கடற்பாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கடற்பாசிகளில் 60 வகைகள் வணிக முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இவைகள் உணவு , மருந்து பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.

    தமிழ்நாட்டில் ராமேசு வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,863 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள கடல்பகுதிகளில் சுமார் 75 ஆயிரத்து 373 டன் கடற்பாசிகள் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிரா மங்களை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது மண்டபம், தோணித்துறை, வேதாளை, சீனியப்பா தர்கா ஆகிய கடலோர பகுதிகளில் ஹப்பா பைகஸ் எனப்படும் கடற் பாசிகள் சுயஉதவி குழுக்கள் மூலம் கடலோர பகுதியில் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கடலில் தானாகவே விளையும் சர்காஸம் எனப்படும் கட்டாக் கோரைபாசிகள் சேகரிப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இந்த வகை பாசிகள் ஆழ்கடலில் பாறைகள் இருக்கும் பகுதியில் வளரு கின்றன. கடல் நீரோட்டம் மற்றும் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்போது வேருடன் பிடுங்கப்பட்டு இவைகள் கரைக்கு வந்து சேருகின்றன. இதுதவிர மீனவர்களும் நாட்டுபடகில் சென்று ஆழ்கடலில் முத்து குளிப்பதைபோல இந்த வகை பாசிகளை சேகரிக் கின்றனர்.

    இதனை கடற்கரை பகுதிகளில் நன்றாக உலர வைத்து ஒரு டன்னிற்கு

    ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த பணிகளில் பெண்கள் அதிக ளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    சர்காஸம் வகை கடற்பாசியில் இருந்து சோடியம் அல்ஜினேட் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது டெக்ஸ்டைல் தொழிலில் சாயம் சேர்க்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மருத்துவம், உணவுப்பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகிறது.

    இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், கடலோர பகுதிகளில் போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த வருமானமே கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது கடல்பாசிகளை சேகரிக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா பணிகள் தொடக்கம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வழமாவவூரில் கடந்த 2-ந்தேதி மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி முருகன் ஆகியோர் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மணிலா உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர்கள் காய்ந்து போனது.
    • பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    • காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
    • அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பாக பன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் ,இளம் பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் திரண்டு வந்தனர், இந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கண் கவரும் விதமாக நாய் கண்காட்சி ,மள்ளர் கம்பம், மல்லர் கயிர் காவல் துறை சார்பில் நாய் சாகச நிகழ்ச்சி, கயிறு இழுக்கும் போட்டி பீச் வாலிபால், சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பொதுவெளியில் மேடை அமைத்து பாடல்கள் ஒளிபரப்பியதன் மூலம் இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் ஆரவாரமாக குத்தாட்டம் போட்டுக் ஆடி பாடி கொண்டாடினார்கள்.. மேலும் ஒவ்வொரு கேளிக்கை நிகழ்ச்சியையும் அனைவரும் ஆர்வமாக கண்டுகளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியானது கடலூரில் புதுமையாக இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் ,இளைஞர்கள் காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் , அய்யப்பன் எம்.எல்.ஏ.,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த மக்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது, கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு 30 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் 30 என்ற தலைப்பில் 10நாட்கள் ஏராளமான நிகழ்ச்சிகள் புதுவிதமாகவும் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

    • வியாழனுக்குரிய சிவத்தலம்-ஆலங்குடி வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
    • அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

    நவ திருத்தலங்கள்

    சூரியன்

    சிவத்தலம் -சூரியனார் கோயில்

    வைணவத்தலம்-திருவைகுண்டம்

    சுக்கிரன்

    சிவத்தலம்-கஞ்சனூர்

    வைணவத்தலம்-தென் திருப்போரை

    புதன்

    சிவத்தலம்-திருவெண்காடு

    வைணவத்தலம்-திருப்புளியங்குடி

    செவ்வாய்

    சிவத்தலம்-வைதீஸ்வரன்

    வைணவத்தலம்-திருக்கோளூர்

    கேது

    சிவத்தலம்-கீழப்பெரும் பள்ளம்

    வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

    சனி

    சிவத்தலம்-திருநள்ளாறு

    வைணவத்தலம்-திருக்குளந்தை

    வியாழன்

    சிவத்தலம்-ஆலங்குடி

    வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி

    சந்திரன்

    சிவத்தலம்-திங்களூர்

    வைணவத்தலம்-வரகுணமங்கை

    ராகு

    சிவத்தலம்-திருநாகேசுவரம்

    வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

    எத்தனை சுற்று சுற்றுவது?

    நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

    அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

    அது எத்தனை சுற்று தெரியுமா?

    சூரியன்10 சுற்றுகள்

    சுக்கிரன்6 சுற்றுகள்

    சந்திரன்11 சுற்றுகள்

    சனி8 சுற்றுகள்

    செவ்வாய்9 சுற்றுகள்

    ராகு4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்

    புதன்5, 12, 23 சுற்றுகள்

    கேது 9 சுற்றுகள்

    வியாழன்3, 12, 21 சுற்றுகள்

    • தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
    • மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு-கேது

    ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.

    ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.

    தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.

    தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.

    தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.

    ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.

    உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.

    இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.

    இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.

    ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு – கேது தோஷம் பற்றி

    இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.

    ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,

    கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.

    பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,

    எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.

    ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.

    உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.

    அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.

    அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.

    ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

    ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,

    மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.

    அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

    ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.

    உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,

    அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,

    அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.

    இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.

    நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.

    அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.

    • சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
    • ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.

    சனிபகவான்

    சங்கடந்தீர்க்கும் சனிபகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றிச் சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தாதா

    மாமன்னர்களையும் மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான்.

    இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.

    அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.

    காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர்.

    நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.

    எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள்.

    ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.

    காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.

    செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.

    துலாம், மகரம், கும்பம் அகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார்.

    ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின்,

    அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.

    வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம்.

    சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது.

    இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.

    மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.

    சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும்.

    வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார்.

    இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

    நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.

    1.திருநாள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனிபகவான் மூலவரையும் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)

    2.பித்ரூ பூஜை, சனிபகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை அகும் என்று நாரத மகரிஷி கூறுவதாகப்புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காகத் தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.

    3.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.

    4.சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.

    5.எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.

    6.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.

    7.தினமும் சனி துதியையும், சனி காயத்திரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்)

    இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.

    • தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
    • சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.

    சுக்கிரன்

    தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.

    இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார்.

    சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

    சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான்.

    குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்.

    அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான்.

    சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.

    சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.

    சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:

    ஓம் அச்வத்வஜாய வித்மஹே

    தனூர் அஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர ப்ரசோதயத்!

    என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும்.

    வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம்.

    குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    • கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
    • புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு

    புதன் பகவான்!

    கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.

    புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.

    புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.

    மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.

    சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    புதனின் பகவானுக்கு உகந்தது:

    நிறம் - பச்சை,

    தானியம் - பச்சை பயறு,

    நவரத்தினம் - மரகதம்,

    உலோகம் - பித்தளை,

    பருவம் - இலையுதிர் காலம்,

    பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.

    புத பகவான்-காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே

    சுகஹஸ்தாய தீமஹி

    தந்நோ புத ப்ரசோதயாத்;

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

    புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.

    நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.

    மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    ×