search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாழன்"

    • ‘குரு’ என்ற சொல்லில், ‘கு’ என்பதற்கு இருள் என்றும், ‘ரு’ என்பதற்கு ‘அறவே நீக்குதல்’ என்றும் அர்த்தம் உண்டு.
    • அதாவது, ‘குரு’ என்ற சொல்லுக்கு ‘நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்’ என்பது பொருளாகும்.

    'குரு' என்ற சொல்லில், 'கு' என்பதற்கு இருள் என்றும், 'ரு' என்பதற்கு 'அறவே நீக்குதல்' என்றும் அர்த்தம் உண்டு.

    அதாவது, 'குரு' என்ற சொல்லுக்கு 'நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்' என்பது பொருளாகும்.

    ப்ருஹஸ்பதி, வியாழ பகவான் என்கிற பெயரிலேயே பெரும்பாலானவர்கள் அறிந்திருந்தாலும், குரு பகவானுக்கு உரிய திருநாமங்கள் எண்ணற்றவை.

    'தேவர்களின் தலைவனான இந்திரனுக்கே குருவாக விளங்குவாய்' என்று ஈசனால் அனுக்ரஹம் செய்யப்பட்டவர் குரு பகவான்.

    இதனால் தேவ குரு, ஸுக்ராச்சார்யர் என்கிற திருநாமங்கள்.

    குருவின் உபதேசத்தால் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் நன்மை அடைந்ததைக் குறிக்கின்றன இந்தத் திருநாமங்கள்.

    தவிர வாகீசர், பொன் ஆடைகளாலும் இளமைத் தோற்றத்தாலும் காணப்படுவதால் பீதாம்பரர், யுவர் என்றும், சிறந்த தலைமைக்கு உதாரணமாக விளங்குவதால் த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்றும், கருணை நிரம்பியவர் என்பதால் தயாகரர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.

    மேலும் தனகாரகன், புத்திரகாரகன், மஞ்சள் வண்ணன், நீதிகாரகன், தாராபதி, கிரஹபீடா பரிஹாரகர், ஸௌம்யமூர்த்தி போன்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.

    • 2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.
    • 5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    1. வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.

    2. லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார்.

    3. லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.

    4. 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.

    5. 2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.

    6. 2-ல் உள்ள குரு சில நேரங்களில் சிலருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை வழங்குவார்.

    7. குரு தனுசிலோ மீனத்திலோ இருக்கப் பெற்று அது, 2-ஆம் இடமாக அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் விற்பன்னராவார்.

    8. தனுசு, மீனம் தவிர வேறு இடங்கள் 2-ஆம் இடமாகி, அங்கே குரு இருக்கப் பெற்றவர்கள், குடும்ப வாழ்வில் சில தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

    9. 3-ஆம் இடத்தில் உள்ள ஜாதகருக்கு உலோப குணத்தை வழங்குவார். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்படும்.

    10. 3-ஆம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகரை பெண்களிடம் பிரியம் உள்ளவராக உருவாக்கி வைப்பார்.

    11. 3-ஆம் இடத்தில் உள்ள வியாழன் ஜாதகரை ஒரு நூலாசிரியராக ஆக்கி வைப்பார்.

    12. 3-ல் உள்ள குருவால் ஜாதகர் சகோதரரால் நலம் பெறவும் சகோதரருக்கு நலம் புரியவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    13. 3-ல் உள்ள வியாழன் ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உரியவராகச் செய்வதற்கு இடமிராது.

    14. 3-ல் உள்ள வியாழனால் ஜாதகருக்கு ஜீரணசக்தி திருப்திகரமாக அமையாது.

    15. 4-ல் உள்ள குரு சுகமான வாழ்க்கையைத் தருவார்.

    16. மக்கள் நலம், தாய் நலம், நண்பர்கள் நலம், பணியாட்கள் நலம், குடும்ப நலம் இவைகள் எல்லாம் ஜாதகருக்கு 4-ஆம் இடத்தில் உள்ள குருவால் உண்டாகும்.

    17. விவசாயத்தின் மூலம் தானியங்களைச் சேர்த்து பொருள் திரட்டக்கூடிய வாய்ப்பு 4-ஆம் இடத்து வியாழன் ஜாதகருக்கு உண்டாக்குவார்.

    18. 4-ல் உள்ள குரு ஜாதகரை உன்னதமானவராக உருவாக்குவார். ஆனால், பகைவர்களால் தொல்லைகளை விளைவிப்பார்.

    19. 4-ல் உள்ள குரு பலம் பெற்றிருக்கும் போது ஜாதகருக்கு மதிப்பும், செல்வமும் உயரும்.

    20. 4-ல் உள்ள குரு புத்திர பாக்கியம் தாமதமாக உண்டாகச் செய்வார்.

    21. வியாழன் 5-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கையில் உயர்ந்த பதவி அமையும்.

    22. 5-ஆம் இடத்தில் உள்ள குரு புத்திகாரனாக இருப்பதனால் புத்திரப் பாக்கியக் குறைவு ஏற்படும்.

    23. 5-ல் உள்ள குரு சுபக்கிரகங்களோடு சேராமல் பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் புத்திர பாவத்தைப்பொருத்த வகையில் சங்கடம் உண்டாகும்.

    24. 5-ல் உள்ள குரு,பொதுவாக வயிற்றுத் தொல்லையைத் தரக்கூடும்.

    25. 5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    • திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
    • வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

    திட்டை திருத்தலம் கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது.

    ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும்.

    குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.

    ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள்.

    குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள்.

    திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள்.

    தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள்.

    இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள்.

    சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.

    திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

    வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

    விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும்.

    வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

    • மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.
    • மஞ்சள் நிற ஆடையை தானம் செய்யுங்கள்

    திட்டை குருபகவானை வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.

    குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.

    நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள்.

    தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

    இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும்.

    மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.

    மஞ்சள் நிற ஆடையை தானம் செய்யுங்கள்

    வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.

    நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.

    குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

    மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.

    கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    • 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
    • உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம்.

    அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.

    திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

    அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான்.

    தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.

    கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

    திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.

    இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.

    24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.

    உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    • இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
    • நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு.

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு.

    தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.

    மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர்.

    எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

    இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு.

    மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட யோகம் தரும் அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.
    • ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

    திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை.

    ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படவில்லை.

    இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.

    சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!

    இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.

    ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர்.

    தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

    திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள்.

    அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார்.

    அப்படியான சிவ தலங்களில் 22-வது திருத்தலம் தென்குடித்திட்டை.

    தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

    பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம்.

    வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது.

    எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

    வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

    இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில் இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றி சொல்லியிருக்கிறார்.

    துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

    • இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.
    • அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.

    குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை.

    தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.

    திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது.

    அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள்.

    பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாக சொல்கிறார் தென்னாடுடைய சிவனார்.

    இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.

    ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம்.

    அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர்.

    அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும்.

    கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.

    ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார்.

    அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.

    தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம்.

    இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப்படுபவராக உள்ளார்.

    தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.

    • ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
    • குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.

    ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

    தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.

    வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டி சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும்.

    நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

    வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.

    வியாழனன்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.

    மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமை களில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம்.

    எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.

    ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.

    இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

    • இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.
    • பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.

    இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார்.

    இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.

    பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.

    குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம்.

    நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.

    ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.

    சூரியன், சந்திரன் நண்பர்கள்.

    புதன் சுக்கிரன் பகைவர்கள்.

    சனி, ராகு, கேது சம நிலையினர்.

    • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
    • குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    குரு என்னும் வியாழ பகவானை தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள்.

    ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

    குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர்.

    கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.

    குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.

    குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீ சன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.

    தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும்.

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    ×