search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிகாரங்கள்"

    • பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.
    • பெண்களுக்கான சிறப்பு ராசிபலன்கள்.

     

    மேஷம்

    இந்த சனிப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். புராதனக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கேட்ட உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும். சுய ஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சொந்தங்கள் போற்றும் விதம் வாழ்வமையும்.

     ரிஷபம்

    இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

     மிதுனம்

    இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகப்பணியாளர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

     கடகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வது உத்தமம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் உருவாகலாம். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

     சிம்மம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தடுத்து விரயங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகளையும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

     கன்னி

    இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்திலேயே அமைகின்றது. குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியிலும். தாய் வழியிலும் உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

     துலாம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்பட எதிர்மறை கருத்துக்களைத் தவிர்த்து நேர்மறை கருத்துக்களை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப்பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

     விருச்சிகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக வரவிற்கேற்ற செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தன்னம்பிக்கையும், தைரியமும், அயராத உழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் உறவு பலம்பெற விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாள முயற்சி எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

     தனுசு

    இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கல்யாணக் காரியங்களில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தடுமாற்றங்களும், தடைகளும் அகலும். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். வீடு வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

     மகரம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவால் பெண்களுக்கு செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தருவதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர்.

     கும்பம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீடு மாற்ற மும், இட மாற்றமும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல் பட்டால் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்படிப்பின் விளைவாகவோ, வேலையின் நிமித்தமாகவோ வெற்றி உண்டு. உடன்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொள்ளலாம் என்பதால் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் நன் மையை வழங்கும்.

     மீனம்

    இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக உங்களுக்குத் தொடங்குகின்றது. எனவே எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் விரும்பும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. நீங்கள் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மை தரும்.

    • ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
    • மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    * ஆடையில் நல்ல வாசனைத்திரவியம் (செண்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும்.

    * சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

    * மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக்குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.

    * மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போடச்சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள தோஷ நிவாரணமாகவும், அன்யோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும்.

    * பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.

    * பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    • எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது.
    • உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.

    வட இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற நூல் லால்கிதாப். இந்திய ஜோதிட கைரேகை சாஸ்திரத்தை பற்றிய பண்டைய நூலான இதில் 12 ராசிகளுக்கும் சில எளிய மற்றும் சிறந்த பலன்களை தரக்கூடிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இதை பின்பற்றி வருகின்றனர்.

    மேஷ ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்

    * எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது. ஒரு சிறு தொகை கொடுத்தாவது அதை வாங்க வேண்டும்.

    * சிகப்பு நிற கைக்குட்டையை பயன்படுத்துவது மிகவும் அதிர்ஷ்டவசமாகும்.

    * பின்னம் ஏதும் இல்லாத, டிசைன் இல்லாத வெள்ளிக்காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்துகொண்டால் வாழ்வில் நன்மை ஏற்படும். பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.

    * சுவீட் அல்லது மிட்டாய் செய்பவராகவோ, சுவீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்பவராகவோ இருக்க கூடாது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை கெடுக்கும்.

    * உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.

    * தாய் மற்றும் குரு போன்ற ஆன்மிக பெரியவர்களுக்கும், ஞானிகளுக்கு முடிந்த அளவு உதவி, சேவை செய்தல் வேண்டும்.

    * உறங்கும் போது தலை பக்கத்தில் ஒரு செம்பு நிறைய நீர் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு உற்றி வரவும்.

    இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தையும் நீங்கள் செய்து வந்தால் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபிட்சம் நிறைந்துவிடும், துன்பங்கள் குறையும்.

    • செவ்வாய் பகவானை வழிபட விரைவில் சொந்த வீடு அமையும்.
    • ஒன்பது செவ்வாய் அபிஷேக செய்து வழிபட வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை செய்யாய் ஓரையில் செவ்வாய் பகவானை நினைத்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்த வீடு அமையும்.

    * நிலம் அமைத்து வீடு அமைய தாமதம் ஆகும்போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அந்த ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி அங்குள்ள கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து வீட்டு கட்டும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும்.

    * வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய் அன்று அபிஷேகம் செய்து வணங்கிவர வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    * ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்க கொடுத்தால் வீடு வாங்கவும், வீடு கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

    • வியாழனுக்குரிய சிவத்தலம்-ஆலங்குடி வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
    • அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

    நவ திருத்தலங்கள்

    சூரியன்

    சிவத்தலம் -சூரியனார் கோயில்

    வைணவத்தலம்-திருவைகுண்டம்

    சுக்கிரன்

    சிவத்தலம்-கஞ்சனூர்

    வைணவத்தலம்-தென் திருப்போரை

    புதன்

    சிவத்தலம்-திருவெண்காடு

    வைணவத்தலம்-திருப்புளியங்குடி

    செவ்வாய்

    சிவத்தலம்-வைதீஸ்வரன்

    வைணவத்தலம்-திருக்கோளூர்

    கேது

    சிவத்தலம்-கீழப்பெரும் பள்ளம்

    வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

    சனி

    சிவத்தலம்-திருநள்ளாறு

    வைணவத்தலம்-திருக்குளந்தை

    வியாழன்

    சிவத்தலம்-ஆலங்குடி

    வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி

    சந்திரன்

    சிவத்தலம்-திங்களூர்

    வைணவத்தலம்-வரகுணமங்கை

    ராகு

    சிவத்தலம்-திருநாகேசுவரம்

    வைணவத்தலம்-இரட்டை திருப்பதி

    எத்தனை சுற்று சுற்றுவது?

    நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

    அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

    அது எத்தனை சுற்று தெரியுமா?

    சூரியன்10 சுற்றுகள்

    சுக்கிரன்6 சுற்றுகள்

    சந்திரன்11 சுற்றுகள்

    சனி8 சுற்றுகள்

    செவ்வாய்9 சுற்றுகள்

    ராகு4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்

    புதன்5, 12, 23 சுற்றுகள்

    கேது 9 சுற்றுகள்

    வியாழன்3, 12, 21 சுற்றுகள்

    • தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
    • மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு-கேது

    ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.

    ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.

    தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.

    தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.

    தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.

    ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.

    உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.

    இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.

    இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.

    ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு – கேது தோஷம் பற்றி

    இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.

    ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,

    கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.

    பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,

    எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.

    ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.

    உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.

    அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.

    அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.

    ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

    ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,

    மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.

    அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

    ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.

    உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,

    அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,

    அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.

    இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.

    நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.

    அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.

    • சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
    • ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.

    சனிபகவான்

    சங்கடந்தீர்க்கும் சனிபகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றிச் சாகா நெறியில்

    இச்சகம் வாழ இன்னருள் தாதா

    மாமன்னர்களையும் மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான்.

    இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.

    அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.

    காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர்.

    நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.

    எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள்.

    ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.

    காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.

    செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.

    துலாம், மகரம், கும்பம் அகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார்.

    ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின்,

    அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.

    வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம்.

    சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது.

    இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.

    மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.

    சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும்.

    வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார்.

    இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

    நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.

    1.திருநாள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனிபகவான் மூலவரையும் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)

    2.பித்ரூ பூஜை, சனிபகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை அகும் என்று நாரத மகரிஷி கூறுவதாகப்புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காகத் தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.

    3.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.

    4.சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.

    5.எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.

    6.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.

    7.தினமும் சனி துதியையும், சனி காயத்திரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்)

    இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.

    • தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
    • சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.

    சுக்கிரன்

    தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.

    இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார்.

    சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

    சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான்.

    குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்.

    அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான்.

    சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.

    சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.

    சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:

    ஓம் அச்வத்வஜாய வித்மஹே

    தனூர் அஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர ப்ரசோதயத்!

    என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும்.

    வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம்.

    குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    • கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
    • புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு

    புதன் பகவான்!

    கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.

    புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.

    புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.

    மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.

    சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    புதனின் பகவானுக்கு உகந்தது:

    நிறம் - பச்சை,

    தானியம் - பச்சை பயறு,

    நவரத்தினம் - மரகதம்,

    உலோகம் - பித்தளை,

    பருவம் - இலையுதிர் காலம்,

    பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.

    புத பகவான்-காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே

    சுகஹஸ்தாய தீமஹி

    தந்நோ புத ப்ரசோதயாத்;

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

    புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.

    நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.

    மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    • சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
    • அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.

    சந்திரன்

    வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.

    சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.

    இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.

    சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்

    ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.

    மூன்றாம் பிறை தரிசனம்

    மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

    மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

    பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.

    ×