search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை தொகை"

    • 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
    • திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்ய 3 கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்டன.

    சென்னையில் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2 கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,727 சிறப்பு முகாம்கள் மூலம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

    ஏற்கனவே வேறு திட்டங்களில் பயன்பெறக் கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தமுள்ள 1428 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    பெறப்பட்ட விண்ணப்பங்களில் முறையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்காமல் இருந்த குடும்ப தலைவிகள் வீடுகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

    பெறப்பட்ட மனுக்களில் எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல் சந்தேகமாக இருந்த, உரிய தகவல் இல்லாத விண்ணப்பதாரர்களின் வீடுகளில் மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

    விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் நடக்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத் திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர்.

    • வீடு வீடாகச் சென்று நேரடியாக களப்பணி

    பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியானகுப்பம் மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் மற்றும் கேத்தாண்டப்பட்டி, ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பம் படிவத்தில் வழங்கியுள்ள தகவல்களை சரிபார்க்கும் பணியை வீடு வீடாகச் சென்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் குறிப்பிட்ட தகவல்கள் உண்மைதானா என குறித்து நேரடியாக களப்பணி நடைப்பெற்று வருகிறது.

    இதனை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடிரென பார்வையிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

    • நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

    மேலும் இந்த இரு கட்டங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்தால் பதிவேற்றம் செய்ய இயலாமல் விடுபட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை 3 நாட்களில் ஏற்கனவே மனுக்களை பெற்று பதிவேற்றம் நடைபெற்ற மையங்களிலேயே மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் தற்போது முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

    மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

    இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கமுதி அருகே மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் நடந்தது.
    • 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாம், மண்டல பொறுப்பாளர் உதய லட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி, துணைத் தலைவர் மைதீன்,ஊராட்சி செயலர் முத்துராமு ஆகியோர் முன்னிலையில்,தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வி, முத்துபாப்பாத்தி ஆகியோர் மகளிர் உரிமைத் தொகை க்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர்.

    இதேபோல் கமுதி பகுதியில் 2-ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகத்தில், வருவாய் ஆய்வாளரும், மண்டல பொறுப்பாளருமான மணிவல்லபன் முன்னிலையில் நடை பெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அளித்தனர்.தன்னார்வலர்கள் இதைப் பெற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 51 மையங்கள் மூலமாக இருந்து 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    தமிழகம் முழுவதும் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவேரி‌பட்டணத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
    • மகளிருக்கான உரிமை தொகை வழங்க தற்போது ரேசன் கடைகளில் விண்ணப்படிவத்தை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    காவேரிப்பட்டினம்,

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சி 2-வது வார்டு கோவிந்தப்ப முதலியார் தெருவில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மற்றும் பதிவு ரசீதுக்கான டோக்கன்களை மகளிர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கிளைச் செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சூளகிரியில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெண்களுக்கு வீடு, வீடாக அரசு ஊழியர்க்ள விநியோகம் செய்து வருகின்றனர்.

    சூளகிரி, ஜூலை.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மாதிரி முன்னோட்ட விண்ணப்ப பதிவு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாயவிலைக்கடைகளில் உள்ள 5,64,624 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக நாளை வரை தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    2-ம் கட்டமாக பதிவு செய்யும் நபர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், மேற்படி ஒப்புதல் ரசீதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் என்ன தேதியில் எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்ற விவரம்ப திவு செய்யப்பட்டிருக்கும். மேற்படி விவரம் தினந்தோறும் விற்பனை–யாளரால் விளம்பரப் பலகையில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் (குடும்பத்தலைவி மட்டும்) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமிற்கும் ஒரு முகாம் பொறுப்பு அலுவலர், ஒரு காவலர், ஒரு உதவி மைய தன்னார்வலர்கள் அலுவலர், ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பதிவாளர் வீதம் பணிய மர்த்தப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக 584 இடங்களில் 823 பதிவாளர்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை பதிவு செய்யப்பட உள்ளனர்.

    மாவட்ட அளவில் மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் 2-ம் கட்டமாக மீதமுள்ள 510 இடங்களில் 774 பதிவாளர்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை பதிவு செய்ய திட்டமி டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

    • பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வருடம் தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
    • கிராமப்புறங்களில் மாணவ மாணவியர் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    அரசு சார்பாக 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதை இலவசமாக பார்க்காமல் கற்ற கல்விக்கு உரிமையாக பார்க்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்வியை மட்டும் தான் யாராலும் எடுத்துகொள்ள முடியாது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் உங்களை பார்த்து கொள்ள தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனவே வேறு எங்கும் கவனம் செலுத்தாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வருடம் தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதனை துவக்கி வைத்துள்ளேன்.

    கவர்னர் கடிதம் தொடர்பான விஷயத்தை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார் என்றார்.

    மகளிர் உரிமை திட்டம் 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவேன் என்று சொன்னார்களே 15 ரூபாயாவது கொடுத்தார்களா? அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச அருகதை இல்லை என குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் மாணவ மாணவியர் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×