search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை தொகை"

    • தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
    • மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

    நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.

    பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.

    ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.


    பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.

    அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.

    இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

    மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.

    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக அரசால் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

    மகளிர் உரிமை தொகை தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் புதிய ரேசன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. உணவு வழங்கல் துறை புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை. புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

    இதே போல் தனி குடும்ப அட்டைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். பெற்றோருடன் வசித்த குடும்பங்கள் தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எவ்வித பணியும் கடந்த 5 மாதமாக மேற்கொள்ளப்படவில்லை.

    சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆகிய நிலையில் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகளை தொடர முடியாமல் உணவு பொருள் வழங்கல் துறையின் வெப்சைட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு 5 மாதமாக நடைபெறவில்லை. துறையில் உள்ள அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன் கள ஆய்வு பணிகள் தொடங்கும். இணைய தளம் வழியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டு வழங்குவதற்கான ஆய்வு பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • ராஜபாளையத்தில் மோட்டார் வாகன அலுவலகம் திறக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி ரோட்டில் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய பகுதி அலுவல கத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த பயனா ளிக்கு புதிய அலுவலகத்தின் மூலம் முதல் பழகுநர் உரி மத்தை அவர்கள் வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் பேசுகையில்:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், ஒவ்வொரு திட் டங்களையும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யிலும், பெண்களின் முன் னேற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுத்தி வருகிறார்.

    ராஜபாளையம் பகுதி மக்கள் முன்பு போக்கு வரத்துத்துறை சார்ந்த பணி களுக்காக கிருஷ்ணன் கோவில் அலுவலகம் வரை செல்ல வேண்டி இருந்தது. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, ராஜபாளை யம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடர் முயற்சி மேற்கொண்டதின் பலனாக அமைச்சரின் உறுதுணையுடன் போக்கு வரத்துறை மூலம் தற்போது மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக கலைஞரின் மகளிர் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான வர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    விண்ணப்பம் செய்துள்ள வர்களில் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாத வண்ணம் அதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

    பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமை பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என பெண்களின் பொருளா தார ரீதியான முன்னேற்றத் திற்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையி லான அரசிற்கு அனைவரும் உறுதுணையாகஇருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், ராஜ பாளையம் நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம், துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.

    இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டி யன், கடற்கரை, பூசைப் பாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன் மதிமாரி முத்து,

    நகரசெயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், வருவாய் துறையினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கரன்கோ வில் தாசில்தார் பாபு நன்றி கூறினார்.

    • மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் 7 லட்சம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந் தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தீபாவளி பண்டிகை 12-ந்தேதி வருவதையொட்டி 10-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்றே தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது.

    இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர்கள் கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது.

    அதில் புதிதாக 7 லட்சம் மகளிர் அந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை அவர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வழங்க உள்ளார்.

    இப்போது இந்த திட்டத்தில் மொத்த பயனாளிகள் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் பயன்பெற உள்ளனர். மாதம் 1000 ரூபாய் வீதம் வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

    இந்த திட்டத்தை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த திட்டம் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஏற்படுத்தி தந்தீர்களோ அதேபோல பாராளுமன்ற தேர்தலிலும் அந்த வெற்றியை தருவீர்கள். அதற்காகத்தான் முதலமைச்சர் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    2 நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வில் இருந்தார். நாளைக்கு வெளியில் வந்து விடுவார். நாளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    முதலமைச்சர் இவ்வளவு சீக்கிரம் வருகிறார் என்றால், காரணம் உந்து சக்தியாக இருக்க கூடியது நீங்கள்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர்.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

    இதில் தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந்தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளை கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தீபாவளி பண்டிகை 12-ந்தேதி வருவதையொட்டி 10-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்றே தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது.

    இதனால் மேல்முறையீடு செய்திருந்த குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • 2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியான நிலையில் முதல் நிகழ்ச்சியாக நாளை மறுநாள் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.

    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.

    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில் குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை.
    • கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்தும் பலனில்லை என்றும், அலைகழிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் உரிமைத்தொகை குறித்து அதிகாரிகளிடம் இருந்து நடந்து எந்த முறையான பதிலும் வராததாலும், உரிமைத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறுத்து நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.
    • பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மானாமதுரை

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ் செய்தியை வைத்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஏற்கனவே விண்ணப் பிக்காதர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் ஏராளமான பெண்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங் குள்ள இ-சேவை மையத் தில் தங்களது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளித்தனர். அப்போது அலுவலர்கள் அந்த மேல் முறையீடு செய்பவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தபோது அவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இ-சேவை மைய அலுவலர்களும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் குழப்பம் அடைந்தனர்.

    இதே குழப்பத்தின் காரணமாக இளையான்குடி தாலுகாவிலும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின்னரும் இணையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் உள்ளதால் மீண்டும் பரிசீலனை ஏற்கப்பட்டு தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா? அல்லது கட்டாயம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்தில் பெண்கள் தவித்து வருகின்றனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டா லின் தேர்தல் வாக்குறுதிப்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழ ங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது ஏழை, எளிய பெண்கள், உழை க்கும் இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் பெண்கள் பயனடைகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வரவி ல்லை. மகளிர் உரிமை தொகை கிடைக்கா தவர்கள் குழப்ப மடைந்து ள்ளனர். தகுதி யானவர்களுக்கு கிடைக்கா ததால் பீதியடைந்துள்ளனர். இவர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கு குறித்து வி பரம் கேட்கும் நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கூட்டம் கூடு கிறது. தொ கை கிடைக்கா தவர்கள் இன்று முதல் ஒரு மாதத்தி ற்குள் மேல் முறையீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    மேல் முறையீட்டில் தகுதி உள்ள விண்ணப்ப ங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு உரிமை தொகை வழங்க வேண்டும். தொழி லாளர் நல வாரியத்தில் சேர்ந்தவர்கள், விதவை பென்சன் வாங்கு பவர்க ளின் விண்ணப்ப ங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தொகை பெற விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் சமூக நீதி காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தொடங்கி வைக்கிறார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலா ளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கி றார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பி னர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    அதே போன்று நாளை 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் அமைச்சரின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் அண்ணாவின் சிலை, திருவுருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க வேண்டும்.

    திமுக தோன்றிய செப்டம்பர் 17-ந் தேதி பவள விழாவை கொண்டாடும் விதமாக கட்சி கொடி ஏற்றி அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×