search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகசூல்"

    • கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
    • நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகளை உடனடியாக விற்பனைக்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது.

    அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே இந்த விதைகளை சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும் வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளுக்கு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள், களை விதைகள், பிறரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்து உள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.

    எனவே விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து நல்விதையாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும்.
    • 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டியது முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பதற்கு டி.ஏ.பி உரம் ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் உரம் 500 கிராம், போராக்ஸ் 200 கிலோ ஆகியவற்றை சிறிதளவு நீரில் தனித்தனியே ஊறவைத்து, கரைத்து வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 140 மில்லி பிளானோ-பிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து கொண்டு அக்கலவையை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிர் விதைத்த 30-ம் நாள் மற்றும் 45-ம் நாள் என 2 முறை பயிர்களின் இலையின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

    ஊட்டச்சத்து கரை சலை நிலக்கடலை பயிரில் தெளிப்பதால் இலை துவாரங்களின் வழி யாக ஊட்டச்சத்துகள் நேரடி யாக பயிருக்கு சென்று அடைகின்றன. இதனால் நிலக்கடலை பயிர் சீராக வளர்ச்சி அடைந்து பூக்கள், பிஞ்சுகள் அதிகள

    வில் பிடிப்பதற்கு உதவி புரிகின்றது.

    எனவே நிலக்கடலை விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக விதை நிலக்கடலையினை அறுவடை செய்து அதிக வருமானம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
    • குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.

    தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.

    மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    • குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
    • நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் வைக்க ேதாட்டக்கலை துறைக்கு இலக்கு நிர்ணயம்.
    • பாமாயில் மர சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் தங்கள் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    தஞ்சாவூர்:

    தேசிய சமையல் எண்ணை திட்டம் - எண்ணை பனை(பாமாயில் மரம் ) மூலம் நடப்பாண்டிற்கு ( 2022-23) தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் சாகுபடி செய்வதற்காக தோட்டக்கலைத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்க–ப்பட்டுட்டுள்ளது. இதனை அடுத்து கோத்ரேஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் சார்பில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் தஞ்சை அடுத்த ஒரத்தநாடு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு பாமாயில் மர சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மத்திய மாநில அரசுடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்தும் கோத்ரெஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி - (மார்க்கெட் டெவலப்மென்ட் ) முத்துச்செல்வன் விளக்கினார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கோத்ரேஜ் நிறுவன அதிகாரிகளும், கள பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தோட்டக்கலை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

    மேலும் பாமாயில் மரம் சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்கள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் 2037 -ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகள் அடைகின்ற பலனையும், பாதுகாப்பையும் விளக்கினார்கள். அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒரத்தநாடு அருகில் உள்ள வடக்கூர் கிராமத்தில் பாமாயில் மரம் சாகுபடி செய்து மகசூல் பெற்று வருகின்ற காத்தலிங்கம் என்கின்ற விவசாயியின் வயலை பார்வையிட்டனர்.

    அப்போது தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் இம்மரத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், அரசின் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார். இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாமாயில் மர சாகுபடி இலக்கினை முழுமையாக எட்டுவோம் என்று உறுதியளித்தனர்.

    • அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியில் அதிக மகசூலை கொடுக்கும் பூஸ்டர் பற்றிய விழிப்புணர்வு நடந்தது.
    • பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.

    பாலையம்பட்டி

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி உலக பருத்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பருத்தியில் அதிக மகசூல் பெற பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    வேளாண்மை பல்கலைக்கழத்தின் பயிர் வினையியல் துறை மூலம் பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2.5 கிலோ தெளிக்க வேண்டும்.

    இது பூ உதிர்வை கட்டுப்படுத்தும். காய் பிடிப்பு திறனை அதிகரிக்கும். இதனை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரம் கிராமத்தில் பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பயிர் வினையியல் துறை உதவி பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உரையாற்றினார். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஒருங்கிணைத்தார்.

    • உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது
    • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டு தற்போது 35 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது.

    இருந்தாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தென்னங்குடி, மனத்திடல், விழுதியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே எலி, மயில் ஆகியவை உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது ‌‌விவசாயிகளை வேதனை அடைய செய்து ள்ளது.

    தென்னங்குடி கிராமத்தில் வெண்ணாற்றின் கரையோ ரம் 50 ஏக்கரில் இன்னும் இரு வாரத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.

    ஆனால் தற்போது இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதேபோல் மனத்திடல் கிராமத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளால் நெல் வயல்கள் சேதுமடைந்து வருகின்றன ‌‌‌‌.

    ஏற்கனவே பல்வேறு இயற்கை இடர்பாடுகள் போன்ற சிரமங்களுக்கு இடையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவடை நேர த்தில் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து சேதப்ப டுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது :-

    இரவு நேரத்தில் மட்டுமே காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

    பல நாட்களாக நாங்கள் வயலில் இரவு நேரத்தில் காவல் காத்தாலும் அசந்து தூங்கும் நேரத்தில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து விடுகின்றனநாங்கள் பட்டாசு வெடித்தாலும் காட்டு பன்றிகள் போவ தில்லை.

    அதே நேரத்தில் தாக்கும் முயலும் போது பதிலுக்கு காட்டு பன்றிகளும் தாக்க வருகின்றன.

    காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தா விட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    எனவே போர்க்கால அடிப்படையில் காட்டுக் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அடுத்த கேத்தனூரை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 82). இயற்கை விவசாயி. காய்கறிகள் மட்டுமன்றி, கொடி பந்தல் முறையில் விவசாயம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    பழனிசாமி கூறுகையில், இன்றைய சூழலில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என்பதால், வேளாண் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.இதன்படி சுண்டைக்காய் செடியுடன் கத்தரி செடியை இணைத்து ஒட்டுரக செடியை வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்கள் முன் இது குறித்த ஆய்வுக்காக, அரை ஏக்கரில் ஒட்டுரக கத்தரி சாகுபடி செய்யப்பட்டது.இந்த முயற்சியில் வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு மகசூல் கிடைத்தது.

    தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு பணிக்காக மீண்டும் கத்தரி சாகுபடி செய்துள்ளேன். இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்றார்.

    • உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி குறுவை சாகுபடிக்கு நேரடி விதைப்பு முறை, எந்திர நடவு முறை மற்றும் வரிசை நடவு முறைகளில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தரமான விதைகளின் அவசியம் குறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

    அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் தற்போது குறுவை மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பலவிதமான இடுபொருட்களைப் பயன்படுத்தினாலும் விதைத் தேர்வு தான் மகசூலை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.எனவே பிற ரகக் கலப்பில்லாத, திறன் வாய்ந்த, தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.தரமான விதைகளின் நிலைகளான வல்லுநர் விதைகள், ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை, பூச்சி, நோய் எதிர்ப்புத்தன்மை, ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

    அறுவடை செய்த தானியங்களை அப்படியே விற்பனை செய்வதற்குப் பதிலாக, விதைப்பண்ணைகள் அமைத்து அதன் மூலம் தரமான சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். தரமான சான்று பெற்ற விதைகளை அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமோ பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். விதைப் பண்ணையாக பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப்பறிக்கை 3 நகல்களுடன் இணையத்தில் பதிவு செய்து, சான்றட்டை, விதை வாங்கிய பட்டியல் மற்றும் வயல் வரைபடத்துடன் திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விதைப்பறிக்கை பதிவுக் கட்டணமாக ரூ.25, வயலாய்வுக் கட்டணமாக நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.100,பயறு வகைப் பயிர்களுக்கு ரூ.80 மற்றும் பகுப்பாய்வுக் கட்டணமாக ரூ.80 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப்பறிக்கை பதிவு செய்த பிறகு பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணைகளை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்கிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து பெய்த மழை காரணமாக உளுந்து மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7200 என்ற அளவில் தான் விலைபோகும் நிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே உள்ள தேவராயன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடையில் சித்திரை பட்டத்தில் அதிகளவில் உளுந்து பயிர் செய்துள்ளனர். தற்போது அறுவடை செய்யும்பணி நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் உளுந்து மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால் செலவு செய்த தொகையே கிடைப்பது அரிதாக உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து தேவராயன்பேட்டை உளுந்து சாகுபடி விவசாயிகள் கூறும்போது:-

    எப்போதும் சித்திரை பட்டத்தில் ஆண்டுதோறும் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். இந்தாண்டு சித்திரை பட்டத்தில் உளுந்து தெளித்த போது ஆரம்பத்தில் பெய்த மழை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாலும் உளுந்து செடிகள் நன்றாக வளர்ந்து பூ, வைத்து பிஞ்சு வைக்கும் பருவத்தில் பெய்த மழையாலும், அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக உரிய நேரத்தில் உளுந்து செடிகளை அறுவடை செய்யாததால் உளுந்து வயலிலேயே உதிர்ந்து வீணாகி விட்டதால் உளுந்து மகசூல் வெகுவாக குறைந்து போனது. மேலும் இந்தாண்டு உளுந்து விலை எதிர்பார்த்த விலை கிடைக்கலை. குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7200 என்ற அளவில் தான் விலைபோகும் நிலை உள்ளது. மொத்தத்தில் இந்தாண்டு உளுந்து பயிர் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது என்றார்.

    ×