search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதி"

    • கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.
    • காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் ஜெகந்தி ராபாத் நகரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதியில் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மாநில அரசு வலியுறுத்தியது.

    இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் அதனை ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடிநீர் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசன செயலாளர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில்:- காவிரி படுகையில் உள்ள பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசர தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
    • கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.

    • புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
    • தொல்லியல்துறை அதிகாரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை உக்கடம்-சுங்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதற்காக அங்கு ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்குள் இருந்து புலிக்குத்திக்கல் மீட்கப்பட்டு உள்ளது. இதனை தொல்லி யல்துறை அதிகாரிகள் மீட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மாநகரின் மையப்பகுதியில் புலிக்குத்தி கல் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புலிக்குத்தி கல் சிற்பத்தை ஆய்வுசெய்து வரும் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது:-

    இது 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம். இதில் அடர்ந்த காடுகளை அழித்து இந்த பகுதியில் சிவன் கோவில் கட்டப்பட்டு உள்ளதாக17-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழனின் பூர்வ பட்டயத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் அடர்ந்த காடுகளை அழிக்க பெண் தெய்வம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எனவே மன்ன்ன கரிகாலன் விலங்குகளை பலி கொடுத்து சிவன் கோவிலை கட்டினான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    எனவே அந்த வீரனின் நினைவை போற்றும் வகையில் அந்த கால ஆட்சியாளர்கள் இங்கு புலிக்குத்தி நடுகல்லை வைத்து இருக்க லாம் எனவும் கருதப்படுகிறது.

    புராதன காலத்தில் கோவை மாவட்டம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து உள்ளன. எனவே அப்போதைய அரசன் அந்த பகுதிகளில் உள்ள தெய்வங்களுக்கு விலங்குகளை பலிகொடுத்து கோவன் புத்தூர், இருகூர், வெள்ளலூர், துடியலூர் ஆகிய பகுதிகளை உருவாக்கி உள்ளான்.

    மேலும் கோவை மாவட்டத்தில் எண்ணற்ற புலிக்குத்தி கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த வேண்டும். இதுதவிர அந்த சிற்பம் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் நடுகல்லை நட்டு வைத்து பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே தொல்லியல்துறை அதிகரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவற்றை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை உக்கடம் சுங்கம் சாலை விரிவாக்க பணிக்காக மட்டுமே நடுகல் சிற்பம் அகற்றப்பட்டு உள்ளது. அங்கு பணிகள் முடிந்த பிறகு புலிக்குத்தி கல் மீண்டும் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.

    • ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.26.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடநாடு ஊராட்சி மன்ற அலுவலகம், தூனேரி ஊராட்சி அணிக்கொரை கிராமத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டை புதுப்பிக்கும் வகையில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் காா் நிறுத்துமிடம் அமைக்க ரூ.18 கோடியும், புதிய மாா்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்ட ரூ.18 கோடியும் என மொத்தம் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    மலை மாவட்ட மக்களை சிறப்பிக்கும் வகையில் ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆர். கணேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாராஜ், குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ண குமாா், ஊட்டி நகராட்சி துணைத் தலைவா் ரவிக்கு மாா், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாதன் ,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதாசிவமணி, கடநாடு ஊராட்சி உறுப்பினர் சிவமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000.
    • பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர்.

    ஆண்கள் மட்டும ல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழ்நாடு காவல்துறை க்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவ ரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்றனர்.

    ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பணி நாள் மற்றும் ஊதியம் மிக குறைவு.

    ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000, கேரளாவில் தினமும் ரூ.626 ஊதியத்துடன் ரூ. 18780, பாண்டிச்சேரியில்791 ஊதியத்துடன் ரூ.23730, கர்நாடகாவில் 400 ஊதியத்துடன் ரூ.12000பெறுகிறார்கள்.

    அவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ஐந்து பணி நாட்களுடன், நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2800 ஊதியம் என்பது மிகவும் குறைவானதாகும்.

    மேலும் அவர்களின் முழு கவனமும் இப்பணியைச் சார்ந்தே இருப்பதினால், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாக்கும்.

    குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூட ஊர்க்காவல் படை யினரின் நலன் காக்கப்படும் என்றும்,அவர்களின் பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்- அமைச்சர் நடவடிக்தகை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.

    சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.

    மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.

    வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.

    இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.

    மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.

    லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.

    அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.

    மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொ ருட்டும், வேளாண் தொழி லை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற் கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொ ள்ளும் பொருட்டும், மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் முதல்நிலை அரசு அலுவ லர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி அளித்தார்
    • பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.2005ம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றி பெற்ற ஆனிமேரி ஸ்வர்ணா, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    • தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..
    • ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள அரசாங்கம், ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.

    போரில் படுகொலை செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கா னோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் போராசிரியர் பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் சேவியர், ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு, ரெஜினால்டு ரவீந்திரன், செல்வம், மனோகர், தாமரைச்செ ல்வன், கஸ்தூரி, கோதண்ட பாணி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:- 

    தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×