search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி
    X

    அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி

    • அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி அளித்தார்
    • பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.2005ம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றி பெற்ற ஆனிமேரி ஸ்வர்ணா, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    Next Story
    ×