search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confirmation"

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
    • கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.

    • மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் செஹானஸ் ஆபிதா உறுதியளிக்கப்பட்டது.
    • கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்கில் நகர சபை தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1 கோடி தகுதி வாய்ந்த குடும்ப தலைவி களுக்கு மாதந்தோ றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திதற்கு 2023-24-ம் ஆண்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யதற்கு நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    14-வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஹாஜா சுகைபு:- புதிய பஸ் நிலையம் பின்புறமாக கழிப்பறைகள் சேதம் அடைந்துள்ளதால் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதால் உடனடியாக கழிப்பறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    18-வது வார்டு உறுப்பினர் ஷக்கீனா :- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு ஒரு இடத்திற்கு மட்டும் கற்கள் போடாததால் அந்தப்பகுதி மக்கள் என்னிடம் பலமுறை கேள்வி கேட்டு வருகின்றனர். நான் நகர் மன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆகையால் உடனடியாக கற்கள் போட்டு தர வேண்டும் என்றார்.

    20-வது வார்டு உறுப்பி னர் சேக் உசைன்:- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் முறையாக கால்வாயை சீர் செய்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    24-வது வார்டு உறுப்பினர் சித்திக் :- எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். வெளிப்பகுதியில் கால்வாய் நீரோட்டம் அதிகரித்து வருவதால் அதை சரி செய்வதற்கு எங்கள் பகுதியில் முறையாக குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பொறியாளர் அருள், நகராட்சி அலுவ லர்கள் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    ×