search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து பாதிப்பு"

    • தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
    • வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லை பகுதிகளாக அமைந்துள்ள மூவிருந்தாளி, சுண்டங்குறிச்சி, பன்னீர் ஊத்து மற்றும் தென்காசி- நெல்லை மாவட்ட எல்லை பகுதியான தேவர்குளம் பகுதியில் அமைந்துள்ள மேல இலந்தை குளம் மற்றும் அதன் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பின.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் ஒரு பகுதியாக தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.

    சங்கரன்கோவில், நெல்லை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தரை பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அய்யூப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தற்போது இந்த வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர். லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமே தற்போது இந்த வழியாக செல்ல முடிகிறது.

    இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் கடுமையான வெள்ளப்பெருக்கு இருந்து வருவதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக பாலம் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

    • திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை முதலே மழை பெய்து கொண்டிருந்த நிலையில், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த பஸ் பல்லடம் பனப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆகியது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    இதற்கிடையே காலை நேரமானதால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் நடுவழியில் அரசு பேருந்து நின்றதால் பல்லடத்தில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால், பல்லடம் நகரமே திக்கு முக்காடி போனது. பின்னர் ஒரு வழியாக ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்கி பனி மனைக்கு எடுத்துச் சென்றார். இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • மின் கம்பம், அடிபம்பு மீது வேகமாக மோதியது
    • போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்

    ஆலங்காயம்:

    சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டி ருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அடிபம்பு மீது வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் மற்றும் பம்பு முற்றிலுமாக சேத மானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணிய ம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த வாணி யம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கம்பம், அடிபம்பு மீது வேகமாக மோதியது
    • போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்

    ஆலங்காயம்:

    சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டி ருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அடிபம்பு மீது வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் மற்றும் பம்பு முற்றிலுமாக சேத மானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணிய ம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த வாணி யம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

    அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேப்போல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நம்பியூர் இருகாலூர் அடுத்த கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. கோபி அரசூர்-தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் பலத்த மழையால் நேற்று 2-வது நாளாக நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர்.

    இதேபோல் பவானி சாகர், கொடுமுடி, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் அடுத்த காவிளிப்பாளையம் அருகே உள்ள முல்லை நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதேப்போல் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளியம்பட்டியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    புளியம்பட்டி அருகே பவானிசாகர் சாலை கணக்கரசம்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் விடிய விடிய பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பெருசபாளையம் குட்டை நிரம்பியுள்ளது.

    இதைத்தொடர்ந்து நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையும் நிரம்பியது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் நீரும் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-123, பவானி சாகர்-92, கொடுமுடி-62, குண்டேரிப்பள்ளம்-56.30, தாளவாடி-44.20, சத்தியமங்கலம்-43, வரட்டுப்பள்ளம்-21.20, கொடிவேரி-12, கோபி-10.20, பெருந்துறை-9, மொடக்குறிச்சி-1. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது.
    • மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது. வேலூர் பேரூராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் 30- க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான கடைகள் திறப்பதில்லை. அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து பூ கடை, வாழைத்தார் கடை, வெற்றிலைக் கடை, தின்பண்டங்கள் கடை, மளிகை பொருட்கள் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைக்காரர்கள் பயணிகள் நிற்கும் இடம் வரை கடைகளை விரிவுபடுத்தி இருப்பதால் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் உள்ளே, வெளியே வரும் வழியில் ஆக்கிரப்பு கடையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பரமத்திவேலூர் அரசு கால்நடை மருத்துவமனை நுழைவாயில் இருபுறமும் கடையில் ஆக்கிரமிப்பு செய்து வாடகைக்கு விடுகின்றனர். இங்கும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை மூடிவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சென்றது. அப்போது, கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    இதையடுத்து அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சினை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். இந்த சாலை குறுகிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது.
    • சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. மேலும் விடுமுறை நாள் என்பதால் நேரம் ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் பஸ்சை மீட்டு மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.,

    • குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
    • அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் இடியுடன் கூடிய கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதைப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணி யிலிருந்து இரவு 7 மணிவரை பண்ணாரி, கொத்த மங்கலம், திம்பம் மலைப்பகுதி, ராஜன் நகர் சிக்கரசம்பாளையம், கடம்பூர் மலைப்பகுதி, அணைக்கரை சுஜில்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் நேற்று இரவு முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இதனை அடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் சொல்லி வனத்துறையினர் இன்று அதிகாலையில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலத்தில் பரவலாக பெய்த மழையால் சத்தியமங்கலம்-ஊட்டி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

    அந்த வழியாக செல்லும் தொட்டம்பாளையம், அய்யன் சாலை பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணி துறைக்கு தகவல் சொல்லி வரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    பிறகு 2 மணி நேரம் கழித்து மரத்தை முழுவதுமாக அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-40, ஈரோடு-28, அம்மாபேட்டை-23.40, வரட்டு பள்ளம்-23.30, கோபி-23.20, பவானி-19.40, கவுந்தப்பாடி-9.40, குண்டேரி பள்ளம்-7.80, கொடுமுடி-6, எலந்த குட்டைமேடு-5.40, கொடுமுடி-3, பவானிசாகர்-2.40.

    • நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.
    • தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது.

    இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும்.

    அதேபோல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.

    இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாலத்தின் இரு பகுதியும் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து பல முறை இந்த பாலம் சேதமடைந்தது.

    இந்த நிலையில் கடந்த 25.9.22 அன்று ரூ.13.22 கோடி மதிப்பில் இரு புறமும் உள்ள பாலத்தில் மேல்தளம், சாலைகள் சீரமைத்தல் மற்றும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

    இந்த பாலப்பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.

    இதற்கிடையில் இன்று ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வரும் சாலையில் திடீரென்று பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பாலத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

     சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பஸ் சென்றுகொண்டிருந்தது.பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார். நேற்று இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது .

    இதில் பஸ்சின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் வெங்கடாஜலபதி ,பயணிகள் மணிவேல் (31) , காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞான அருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உள்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சுங்கச்சா வடி விபத்து சேப்டி வேன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

    ×