search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலைய கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு-போக்குவரத்து பாதிப்பு
    X

    வேலூர் பஸ் நிலையத்தை ஒட்டி இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ள வாழைத்தார், வெற்றிலை கடைகளை படத்தில் காணலாம்.

    பஸ் நிலைய கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு-போக்குவரத்து பாதிப்பு

    • பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது.
    • மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது. வேலூர் பேரூராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் 30- க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான கடைகள் திறப்பதில்லை. அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து பூ கடை, வாழைத்தார் கடை, வெற்றிலைக் கடை, தின்பண்டங்கள் கடை, மளிகை பொருட்கள் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைக்காரர்கள் பயணிகள் நிற்கும் இடம் வரை கடைகளை விரிவுபடுத்தி இருப்பதால் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் உள்ளே, வெளியே வரும் வழியில் ஆக்கிரப்பு கடையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பரமத்திவேலூர் அரசு கால்நடை மருத்துவமனை நுழைவாயில் இருபுறமும் கடையில் ஆக்கிரமிப்பு செய்து வாடகைக்கு விடுகின்றனர். இங்கும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×