search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பாலத்தில் மீண்டும் சேதம்: போக்குவரத்து பாதிப்பு
    X

    வல்லநாடு பாலத்தில் சேதமடைந்த பகுதியை காணலாம்.

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பாலத்தில் மீண்டும் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

    • நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.
    • தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது.

    இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும்.

    அதேபோல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.

    இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாலத்தின் இரு பகுதியும் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து பல முறை இந்த பாலம் சேதமடைந்தது.

    இந்த நிலையில் கடந்த 25.9.22 அன்று ரூ.13.22 கோடி மதிப்பில் இரு புறமும் உள்ள பாலத்தில் மேல்தளம், சாலைகள் சீரமைத்தல் மற்றும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

    இந்த பாலப்பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.

    இதற்கிடையில் இன்று ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வரும் சாலையில் திடீரென்று பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பாலத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×